Friday 31 May 2013

உலக பயங்கரவாதிகளே!!!ஒன்றுபடுங்கள்!!!



எனதருமை பயங்கரவாத பெருமக்களே!!   தீவிரவாதிகளே!!   நிழலுலக மாபியாக்களே !!
மத அடிப்படைவாத சகோதரர்களே!!  சமதர்ம தோழர்களே!!  உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம்.

இன்றைய தினம் உலக மக்களின் நலனுக்காக அல்லும்,பகலும் உழைக்கும் நம்மை போன்ற பயங்கரவாத சகோதரர்கள் இங்கே ஒன்றுகூடி ,நமது எதிர்கால திட்டங்களையும்,லட்சியங்களையும்,செயல்பாடுகளையும் தீர்மானிக்க இருக்கிறோம்.பயங்கரவாதிகள் என்றாலே ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்து நம்மை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இன்று "லபோ திபோ"என்று வாயிலும்,வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூப்பாடுபோடும் அவலத்திற்கு ஆளாக்கிய பெருமை நமக்கு உண்டு.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "மக்கள் விரோத"அரசுகள் நம்மை கண்டு மிரண்டு செய்வதறியாது திகைக்கின்றன.ஊடகங்கள் நடுங்குகின்றன.

குண்டு வைத்து தகர்ப்பது,துப்பாக்கியால் சுட்டு தாக்குவது,மனித வெடிகுண்டாக வெடிப்பது போன்ற "தியாக"செயல்களில் ஈடுபடும் நமக்கு இந்த உலகம் என்ன கைமாறு செய்திருக்கிறது?நமது தோழர்களை "என்கௌண்டர்"என்ற பெயரில் சுட்டுக்கொல்லும் "கொடுமை"தான் இந்த உலகம் நமக்கு தந்த கைமாறு !!!

இந்தியா என்ற பெயரில் ஒரு சோப்ளாங்கி நாடு இருக்கிறது.கடந்த இருபது,முப்பது ஆண்டுகளாக அந்த நாட்டை நமது தோழர்கள் குத்தகைக்கு எடுத்து "பயங்கரவாத"தொழில் நடத்தி வருகிறார்கள்.ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்று அந்நாட்டின் மக்கள் தொகையை குறைக்க அரும்பாடு பட்டு வருகிறார்கள்.போலீஸ் வாகனங்களை கண்ணிவெடி வைத்து தகர்த்து போக்குவரத்து நெரிசலை குறைத்து வருகிறார்கள்.ஏராளமான குண்டுவெடிப்பை நிகழ்த்தி அரசுக் கட்டிடங்களையும்,பொது சொத்துக்களையும் தகர்த்து கட்டுமான தொழிலாளர்களுக்கு "புதிய வேலை வாய்ப்பை "பெற்று தந்திருக்கிறார்கள்.அந்நாட்டு அரசும் சரி.அதிகார வர்க்கமும் சரி.நம்மை தங்கள் "உடன்பிறப்பு"க்களாகவே கருதி இன்று வரை நமக்கெதிராக எந்தவொரு உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் நம்மோடு இணக்கமாக நடந்துவருவதால் இன்னும் பல வருடங்கள் நமது தொழில் சிறப்பாக நடக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.எனவே,நமது அயல்தேச தோழர்கள் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்த இந்தியா போன்ற நாடுகளை அணுகினால் சிறப்பான எதிர்காலம் அவர்களுக்கு கிட்டும்.

அமெரிக்காவும்,இஸ்ரேலும் தான் நமது ஜென்ம விரோதிகள்.நாம் அவர்களில் ஒருவரை கொன்றால்,பதிலுக்கு நமது தோழர்கள் ஆயிரம் பேரையாவது சாகடித்து வெறியாட்டம் போடுகிறார்கள்.மனித தன்மையே சிறிதும் இல்லாத இவ்விரு நாடுகளும் இந்தியாவை பார்த்தாவது அஹிம்சையையும்,மனித நேயத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு குண்டு வெடிப்பை நடத்த நாம் எவ்வளவு பாடுபடுகிறோம் என்பதை இந்த சமூகம் சிந்திக்க வேண்டும்.குண்டு வெடித்தவுடன் அறிவுகெட்டத்தனமாக அதில் சிக்கி பலர் மாண்டு போகிறார்கள். படுகாயத்தோடு உயிர் தப்பி "இழப்பீடு"பெற்று ,அடுத்த குண்டு வெடிப்பில் சாகும் வரை வாழும் அதிர்ஷ்டம் சிலருக்கு கிடைக்கிறது.இறந்தவர்கள் பற்றியும்,காயமடைந்தவர்கள் பற்றியும் விசாரப்படும் இந்த சமுதாயம் ,குண்டு வைத்த நமது தோழர்கள் பற்றியோ,அவர்களின் இலட்சியங்கள் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.ஏனிந்த பாரபட்சம்...?நாங்களெல்லாம் மனிதர்களில்லையா...?

முதலில் எங்களை பற்றிய எதிர்மறை சிந்தனைகளை கைவிடவேண்டும்.விபச்சாரம் செய்பவர்களை "பாலியல் தொழிலாளர்கள்"என்று அழைப்பதைப்போல் ,பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எங்கள் தோழர்களை "குற்றவியல் தொழிலாளர்கள்"என்று அழைக்கவேண்டும்.
எங்களுக்கென்று "நல வாரியங்கள்"உருவாக்கப்படவேண்டும்.அரசுப்பணிகளில் பிற்ப்படுத்தப்பட்ட,மிக பிற்ப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு "இட ஒதுக்கீடு"செய்யவேண்டும்.நலிவுற்ற மூத்த பயங்கரவாதிகளுக்கு பென்ஷன் வழங்கவேண்டும்.மனித வெடிகுண்டாக செயல்பட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த பயங்கரவாத "தியாகி"களுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும்.மேற்கண்ட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற அனைத்து  "மத சார்பற்ற"சக்திகளும் அரசுக்கு வலியுறுத்தவேண்டும்.

இறுதியாக ,எங்களோடு நேரடியாக களமிறங்காவிட்டாலும் ,எங்கள் லட்சியங்களுக்கு ஆதரவாக எப்போதும் செயல்படும் மனித உரிமைவாதிகள்,பகுத்தறிவுவாதிகள்,சமதர்மவாதிகள்,தலித்வாதிகள்,பெண்ணுரிமைவாதிகள் ஆகியோருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.
உங்கள் ஆதரவோடு எங்களின் லட்சிய பயணம் ஓயாமல் தொடரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
  

தோரா-போரா பள்ளத்தாக்கிலும்,முள்ளி வாய்க்காலிலும் நம்மை வீழ்த்திவிட்டதாக கொக்கரிக்கும் குள்ள நரிகளின் கொட்டத்தை ஒடுக்க சிறுத்தையென சீறி பாய்ந்திடுவோம்.
வாருங்கள் தோழர்களே!!    எதிர்கால உலகம் நமது கையில்!!


உலக பயங்கரவாதிகளே,ஒன்றுபடுங்கள்!!! இழப்பதற்கு நம்மிடம் ஒன்றுமில்லை!!! ஒழித்துக்கட்டுவதற்க்கோ இந்தியா இருக்கிறது!!!

Sunday 19 May 2013

வாய் மெய்யை வெல்லும்!!!

                                                        ஜோசப் கோயபல்ஸ்

            ரீச் மார்ஷல் ஹெர்மன் கோயரிங்குடன் ஒரு உற்சாக அரட்டை!!!
          
அண்ட புளுகன் ,ஆகாச புளுகன் என்றெல்லாம் ,நம்ம ஊரில் பொய் பேசி திறிவோரை "புகழ்ந்து"பல பட்டங்களை வழங்கி அம்மாதிரியானவர்களை கொண்டாடுவது நமக்கு பழக்கமாகிவிட்டது.பொய் பேசுவது ஒரு கலையாகவே மதிக்கப்படும் அளவுக்கு பிரதம மந்திரி முதல் பீட்சா டெலிவரி பாய் வரை நமது புண்ணிய பாரத தேசத்தில் அனைவரும் புளுகோ புளுகென்று புளுகி தள்ளுகிறார்கள்.வாயை திறந்தால் உண்மையை மட்டும் பேசுவதில்லை என்று அவனவன் கங்கணம் கட்டாத குறையாக ரீல்களையும்,கப்ஸாக்களையும்,பூசுற்றல்களையும் அனுதினமும்,அனவரதமும் பேசிக்கொண்டு திறிகிறான்.

இப்படியாகப்பட்ட ஆசாமிகளில் சில கில்லாடிகளும் உண்டு.தங்கள் பொய்களை ஒரு சமூக மாற்றத்தின் திறவுகோலாக பயன்படுத்தி  தாங்கள் நம்பும் கொள்கைகளை அரியணை ஏற்றும் வாய்ப்பை பெற்று அதன்மூலமாக தங்களின் அதிகாரத்தை பெருக்கி கொண்டு ,மாற்று கொள்கை கொண்டவர்களை சமூக விரோதிகளாகவும்,வந்தேறிகளாகவும்,ஆதிக்க வெறியர்களாகவும் சித்தரித்து,முடிந்தால் அவர்களை ஒழித்துக்கட்டி,சர்வ வல்லமை பெற்ற சூப்பர் தலைவர்களாக வலம்வரும் வாய்ப்பும் சில கில்லாடிகள் பெற்றுவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட திறமை வாய்ந்த உலக மகா புளுகர்களில் தலையாய இடத்தை பெற்றவர் ஜோசப் கோயபல்ஸ்.இன்றளவும் இவரை போன்ற திறமைவாய்ந்த பொய்யர் யாரும் தோன்றிடவில்லை என்பதே அண்ணாரின் மேதமைக்கு சான்று பகரும்.

பால் ஜோசப் கோயபல்ஸ் 1897ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர்.கத்தோலிக்க மதத்தவர்களுக்கே உரிய "யூத வெறுப்பு"கொண்ட சூழலில் வளர்ந்தவர்.பிற்காலத்தில் நாஜி கட்சி ஆட்சியமைத்தபோது அதில் மனிதவள மேம்பாடு,மற்றும் பிரசார அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் யூதர்களை தாக்குவதற்காகவே பல பொய்க்கதைகளை உருவாக்கி மக்கள் மத்தியில் உலவ விட்டார்.அதில் முக்கியமானது "யூதர்கள் கிறிஸ்த்துவ குழந்தைகளை கொன்று,வறுத்து சாப்பிடுகிறார்கள்.அவர்கள் நர மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள்"என்பதே.

கோயபல்ஸிடம் சில வித்தியாசமான திறமைகள் இருந்தன.வரலாற்று ஆசிரியர்கள் அவருடைய கால்களை "கழுதையின் கால்கள்"என்று கேலியாக குறிப்பிட்டாலும் அது அவருடைய வேடிக்கையான அடையாளமாகவே விளங்கியது.அவரை மேடையில் பார்த்தாலே பெண்களும்,குழந்தைகளும் கேலியாக சிரித்தார்கள்.ஆனால்,அவர்களே கூட கோயபல்ஸின் பேச்சுக்களை மெய்மறந்து கேட்டதாக தெரிகிறது.அந்த அளவு பேச்சு திறமையும்,எழுத்தாற்றலும் வாய்க்கபெற்றவர் கோயபல்ஸ்.இரண்டாம் உலக போர் துவங்கிய காலத்தில் மூன்று வகையான பிரசார உத்திகளை மேற்கொண்டார் கோயபல்ஸ்.முதலாவது முணுமுணுப்பு பிரச்சாரம்.அடுத்து ஆரூட பிரச்சாரம்.மூன்றாவது சொன்னதையே பலமுறை திரும்ப சொல்லும் பிரச்சாரம்.இம்மூன்றையும் அவர் பயன்படுத்திய விதம் இன்றைக்கும் பல அரசியல் கட்சிகளுக்கு பாடமாக வைக்கும் அளவுக்கு புகழ் பெற்றது.

முதலாவது முணுமுணுப்பு பிரச்சாரம்;

பொதுமக்கள் கூடும் இடங்களில் "தேர்ந்தெடுக்கப்பட்ட"சில நபர்கள் ஒருவரை ஒருவர் அறியாதவர்போல் நின்றுகொண்டு பேசுவார்கள்.அதில் ஒருவர் "என்ன இருந்தாலும் ஹிட்லர் மாதிரி ஒரு தலைவர் உண்டா..?எந்த கொம்பனும் அவருக்கு ஈக்குவலா வரமாட்டான்"என்பார்.மற்றொரு நபரோ வேண்டுமென்றே அவர் கருத்தை மறுத்து வாதிடுவார்.முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதால் மறுப்பவரின் வாதம் பலவீனமாகவே இருக்கும்.ஹிட்லரை ஆதரித்து பேசுபவரின் வாதம் அழுத்தமாகவும்,கேட்பவரை ஏற்க்கும்படியும் இருக்கும்.இந்த "நாடக"வாதத்தின் இறுதியில் ஹிட்லரை எதிர்த்து பேசிய நபர் தனது "தவறை"உணர்ந்து,திருந்தி நாஜி ஆதரவாளர் ஆகிவிடுவார்.அவர்களின் வாதங்களை செவிமடுக்கும் மக்களுக்கும் ஹிட்லரே  தங்களை யூதர்களிடமிருந்து மீட்க வந்த ரட்சகர் என்ற சிந்தனை மேலோங்கும்.இதுவே முணுமுணுப்பு பிரசாரத்தின் வெற்றி!

அடுத்து ஆரூட பிரச்சாரம்;

கிட்டதட்ட ஜெர்மனியில் வாழ்ந்த அத்தனை ஜோசியர்களுக்கும் பணம் கொடுத்து அவர்களை ஒரே மாதிரி ஆரூடம் சொல்ல வைப்பது."போரில் ஜெர்மனி மிக பெரிய வெற்றி பெரும்.அமெரிக்காவும்,பிரிட்டனும் படுதோல்வியடைந்து ஜெர்மனியிடம் சரணடையும்.கிரக நிலைகள் நமக்கு சாதகமாக உள்ளதால் யூதர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறவேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்கள்".இதுபோன்ற போலி ஆரூடங்களை அனைத்து ஜோசியர்களும் மக்களிடம் சொல்லவைத்து அவர்களை நம்ப வைத்தார்கள்.

அடுத்து சொன்னதை திரும்ப சொல்லும் பிரச்சாரம்;

ஹிட்லரும்,பிற நாஜி தலைவர்களும் பேசிய பேச்சுக்களை திரும்ப திரும்ப மக்களிடம் எடுத்து கூறுவது.வானொலி கண்டுபிடிக்க பட்டதால் இந்த பிரச்சாரம் மக்களிடம் எளிதில் சென்றடைய முடிந்தது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தால் அதை சொல்பவனே ஒரு கட்டத்தில் அதை உண்மை என நம்ப ஆரம்பித்து விடுவான்.இது கோயபல்சின் ஆகபெரிய உத்தி!

அவருடைய சொந்த பத்திரிக்கையான "தி அட்டாக்"-கில் பின்வருமாறு எழுதினார்.
"பாலஸ்தீனத்தை சேர்ந்த யூத இனத்தினர் ஜெர்மனியை ஆக்கிரமித்து நமது வளங்களை சுரண்டி வருகிறார்கள்.நாமோ சூடு சொரணையில்லாமல் யூதர்களிடம் கைகட்டி சேவகம் செய்து வருகிறோம்.முதல் உலக போரில் ஜெர்மனி தோல்வியடைய யூதர்கள் செய்த சதிகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.அவற்றை நான் வெளியிட்டால் யூதன் எவனும் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.நமது நாஜி கட்சியையும்,அதன் ஒப்பற்ற தலைவர் ஹிட்லரையும் "பயங்கரவாதிகள்"என யூத பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன.நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல.நாங்கள் நோய் தீர்க்கும் மருத்துவர்கள்.யூத இனம் என்ற நச்சு கிருமியை ஒழித்து இந்த உலகை காக்க வந்த சுகாதார வல்லுனர்கள்.எந்த விலை கொடுத்தாவது இதை நாங்கள் சாதிப்போம்".

ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கோயபெல்சை ஜெர்மனியின் அதிபராக நியமித்தார்.ஆனால்,துரதிர்ஷ்டவசமாக (அல்லது அதிர்ஷ்டவசமாக)கோயபல்ஸ் ,ஹிட்லர் இறந்த அடுத்த நாளே குடும்பதுடன் தற்கொலை செய்துகொண்டார்.
ஜெர்மனியின் "ஒரு நாள் அதிபர்"ஜோசப் கோயபல்ஸ் நம்மிடமிருந்து மறைந்தாலும் அவர் விட்டு சென்ற "புளுகுகள்,கப்சாக்கள்,அவதூறுகள்"-ஆகியவற்றின் மொத்த அடையாளங்களுடன் வாழும் பல அண்ட புளுகர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்-பகுத்தறிவாளர்கள் என்ற நாமத்தில்!!!                                                        
 

Saturday 11 May 2013

தப்பு தப்பாய் ஒரு தப்பு!!!





ஒரு வழியாக கர்னாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.கட்சிக்கு பெரும் தோல்வியும்,காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பாரா வெற்றியும் கொடுத்துள்ளது.தேர்தல் முடிவுகள் இப்படித்தான் அமையும் என அனைவரும் ஓரளவு யூகித்திருந்தாலும் இந்த முடிவுகள் பா.ஜ.கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளதற்க்கு காரணமான முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது.

கர்நாடகாவில் பா.ஜ.கட்சி ஆட்சியில் அமர காரணமாக விளங்கியவர் எடியூரப்பா.அவரது தலைமையில் அந்த கட்சி கர்நாடகாவில் வெற்றிகளை குவித்தது.இது கட்சியில் இருந்த அவரது எதிர்ப்பாளர்களுக்கு (குறிப்பாக; அனந்த குமார்)அவர் மீது பொறாமையையும்,வெறுப்பையும் தூண்டியது.சுரங்க ஊழல் விவகாரம் வெளியானபோது இவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி எடியூரப்பாவை பதவி விலக வைத்து ,கட்சியிலிருந்து அவரை ஓரங்கட்ட செய்தனர்.பலமுறை இவர்களை பற்றி கட்சி மேலிடத்தில் புகார் அளித்து பார்த்தார் எடியூரப்பா.பலன் ஏதுமில்லை.விளைவு ,கட்சியில் இருந்து வெளியேறி கர்னாடக ஜனதா என்ற புது கட்சி தொடங்கி தனியாக போட்டியிட்டு ,வாக்குகளை பிளந்து காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டார்.கோஷ்டி அரசியலில் காங்கிரஸுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று பா.ஜ.க.வினர் நாட்டு மக்களுக்கு இதன் மூலம் செய்தி தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸை பொறுத்தவரை இது அவர்களின் சொந்த வெற்றியல்ல.இது எடியூரப்பா அவர்களுக்கு கொடுத்த தட்சிணை.மாநிலத்தின் மிக பெரிய வாக்கு வங்கியான லிங்காயத் (வீர சைவர்)வாக்குகளை எடியூரப்பா பிளந்ததால்,பா.ஜ.கட்சி பரிதாபமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பதவியில் அமரும் புதிய முதல்வர் சித்தராமய்யா நன்றி கடனாக எடியூரப்பா மீதான ஊழல் வழக்குகளை நீர்த்து போகவைத்து அவரை காப்பாற்றி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

இந்த கூத்துக்களை பார்க்கும்போது அடியேனுக்கு டெல்லியில் பா.ஜ.கட்சி செய்த அதே கோமாளித்தனங்களை கர்நாடகாவிலும் அரங்கேற்றியதால் நேர்ந்த விளைவோ என தோன்றியது.டெல்லி மாநிலத்தில் 1993ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.பெரும் வெற்றி பெற்று திரு.மதன்லால் குரானா தலைமையில் ஆட்சியமைத்தது.இரண்டாண்டுகளுக்கு பிறகு அவரை நீக்கிவிட்டு திரு.சாஹிப் சிங் வர்மாவை முதல்வராக்கியது.பிறகு இரண்டாண்டுகள் கழித்து அவரையும் நீக்கிவிட்டு திருமதி.சுஷ்மா ஸ்வராஜை முதல்வராக நியமித்தது.அவர் மூன்ற மாதம் மட்டுமே முதல்வர் பதவி வகித்தார்.பிறகு வந்த தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் தோற்கடித்தனர்.தொடர்ந்தால்போல் மூன்று தேர்தல்களில் அந்த கட்சியை மக்கள் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மதன்லால் குரானாவை நீக்கியதால் அவரது "அரோரா"சமூக வாக்குகளை இழந்தனர்.சாஹிப் சிங் வர்மாவை நீக்கியதால் அவரது "ஜாட்"சமூக வாக்குகளையும் பா.ஜ. க.வினர் இழந்தனர்.இதே கோமாளித்தனங்களை தான் கர்நாடகாவிலும் பா.ஜ.க.தலைவர்கள் செய்தனர்.

எடியூரப்பாவை நீக்கியதால் "லிங்காயத்"வாக்கு வங்கி பாதிக்கப்பட்டது.பிறகு முதல்வரான சதானந்த கௌடாவை தொடர்ந்து ஆள  விடாமல்,அவரையும் நீக்கி ஜெகதீஸ் ஷெட்டர் அவர்களை முதல்வராக்கினார்.இதனால் "ஒக்கலிகா"வாக்குகளையும் இப்போது இழந்துள்ளனர்.டெல்லியில் செய்த அதே தவறை கொஞ்சமும் புத்திசாலித்தனமில்லாமல் இங்கே கர்நாடகாவிலும் பா.ஜ.க.தலைவர்கள் செய்துள்ளதை பார்க்கும்போது தவறு செய்வதில் சற்றும் பாரபட்சமில்லாமல்  நடந்து  கொள்ளும் அவர்களின் நேர்மையை பாராட்ட தோன்றுகிறது.நல்லவேளை,குஜராத் கலவரத்திற்கு பொறுப்பேற்று நரேந்திர மோதி பதவி விலகவேண்டும் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கோரிக்கையை பா.ஜ.க.புறக்கணித்தது.இல்லையென்றால் டெல்லியை போல் குஜராத்தும் பா.ஜ.க."கோட்டை"விட்ட மாநிலமாக மாறியிருக்கும்.

நரேந்திர மோதி பதவி விலகவில்லை.குஜராத் பிழைத்தது!!!

Saturday 4 May 2013

ஒரு கைதியின் வைரி!!!




பாகிஸ்தான் என்ற பூலோக நரகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அடைபட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங் அந்நாட்டு உளவு  கொலை படைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.சக கைதிகள் இருவர் அவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்று உணர்வு திரும்பாத நிலையில் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனைக்குரிய சம்பவம்.தொட்டதற்கெல்லாம் "மனித உரிமை"என்று ஓலமிடும் முற்போக்கு மொக்கைகள் எவனும் இந்த படுகொலையை பற்றி வாயை திறக்காமல் மௌனம் சாதிப்பது அவன்களின் யோக்கியதையை நன்றாக அம்பலப்படுத்துகிறது.அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது சாதாரண விஷயம்.பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் அது மனித உரிமை மீறல்.இதுதானே இந்த "தீரா"விட ,தலித்திய, பொதுவுடைமை,மாவோயிஸ  கும்பல்களின் தாரக மந்திரம்!!!

ஒரு சீக்கியர் பிரதமராயிருந்தும் சீக்கியரான சரப்ஜித் சிங்குக்கு எந்த உபயோகமும் இல்லை.ஒரு சீக்கியன் ஒன்றேமுக்கால் லட்சம் வீரர்களுக்கு சமம்.நமது புண்ணியவான் டாக்டர் மன்மோகன்சிங் கோஹ்லி அவர்களோ,ஒன்றேமுக்கால் லட்சம் கோடி ஊழல் செய்தவர்களை சமமாக கொண்டவர்.இப்படியாகப்பட்டவரின் தலைமையில் இந்நாடு தொடர்ந்து ஆளப்பட்டால் அது சீக்கிய மதத்துக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெரும் அவமானமாகிவிடும்.அடியேனை பொறுத்தவரையில் சரப்ஜித் சிங்குக்கு  பாகிஸ்தானியரை விட மன்மோகன் சிங்  போன்ற அல்லக்கைகளே உண்மையான வைரிகள்!!!

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்!!!
வாஹ் குருஜீ தீப்தக்!!!     வாஹ் குருஜீ கால்சா!!!