Monday 13 January 2014

நக்கல் BY நல்ல பிசாசு. EPISODE -3.


 



மை டியர் மானிடர்களே !!!

  சென்னை புத்தக கண்காட்சி கோலாகலமாக தொடங்கிவிட்டது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் 777 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்டால் உள்ளே நுழைந்து வெளியே வர குறைந்த பட்சம்  1 நிமிடம் செலவிட்டாலும் மொத்தமுள்ள 777 ஸ்டால்களை பார்த்து முடிக்க 13 மணி நேரம் ஆகும்போல் இருக்கிறது. அடியேனிடம் அவ்வளவு நேரம் ஸ்டாக் இல்லை என்பதால் வாங்கிப்படித்தே ஆகவேண்டிய 10 புத்தகங்களின் பட்டியலை கீழே தந்துள்ளேன். சென்னைவாழ் நண்பர்கள் யாரேனும் தயை கூர்ந்து மேற்படி (கீழ்படி?) புத்தகங்களை தேடிக்கண்டுபிடித்து அடியேனின் முகவரிக்கு கூரியரில் அனுப்பிவைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


1.        நானும் பேதியும்.
       ஆசிரியர் : முருமாள் பெருகன்.  புழக்கடை பதிப்பகம்.
        
              இந்நூலின் ஆசிரியர் தனது சிறு வயதிலிருந்து பேதியால் பாதிக்கப்பட்டவர்.பேதி  என்பது நமது சமூகத்தை எவ்வாறு சீரழிக்கிறது, தனி மனிதனை எப்படி  "பேதீயவாதி" யாக மாற்றுகிறது என்பதை மிஷனரிகள் மற்றும் இந்தியன் முஜாஹிதீன்  துணையுடன் அம்பலப்படுத்துகிறார்.  சீதபேதி,வாந்திபேதி,கிரண் பேதி,மந்திரா பேதி,பிஷன் சிங் பேதி போன்ற அனைத்து வகையான பேதிகளையும் ஒழிக்க வேண்டும் என்பதே நூலாசிரியரின் விருப்பம்



 2. கருப்பு பூனை.
     ஆசிரியர் : மெய ஜோகன்.  சூலக்கவடு பதிப்பகம்.

      முந்துக்களுக்கும், இஸ்லிம்களுக்கும் எப்போது பிரச்னை ஏற்பட்டாலும் "சதமார்பின்மை" என்ற பெயரில் முந்துக்களை மட்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி அழகு பார்த்தவர் கஹாத்மா மாந்தி. அண்ணாரின் சீட கோடிகளுள் ஒருவரான மெய ஜோகன் வழக்கம்போல் இந்த புதிய நாவலிலும் 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு முந்துக்களே காரணம் என சாடுகிறார். இளிச்சவாய முந்துக்கள் படிக்கவேண்டிய புத்தகம்.

 3. மூல ஸ்தானம்.
     ஆசிரியர் : மார்ல் கார்க்ஸ்.  பைல்ஸ் பப்ளிகேஷன் வெளியீடு.


     இரண்டு நூற்றாண்டுகளாக உலகை கலக்கி (கூடவே வயிற்றையும்) வரும் பெஸ்ட் செல்லர் புத்தகம். மார்ல் கார்க்ஸ் தனது வரட்சிகர கருத்துக்கள் மூலம், மூலம் எப்படி தோன்றுகிறது? மூலத்திற்கும் மனிதனுக்கும் உள்ள பந்தத்திற்கும், மூலத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள பந்தத்திற்கும் ஏற்படும் முரணியக்கத்தை முருள்பொதல்வாத கண்ணோட்டத்தில் விவரிக்கிறார். ஒவ்வொரு வரட்சியாளரும் அவசியம் படிக்கவேண்டிய "மூலாதார" நூல்.

 4. சிறிய புராண ஆராய்ச்சி.
     ஆசிரியர் : நைனா சிரியார்.  அவமரியாதை பிரசுர வெளியீடு.


     திருடர் கழக ஸ்தாபகரும், சிறுத்தறிவு இருளவன் என போற்றப்படுபவருமான நைனா சிரியார் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதிய மத துவேஷ புத்தகம். நைனா சிரியார் தனது வாழ்நாள் முழுவதும் "வீரம்"செறிந்த பேச்சுக்களுடன் "ஜில்லா" ஜில்லாவாக சுற்றி சிறுத்தறிவு பிரச்சாரம் செய்தவர். "நைனா சிரியார் பிறக்காமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் கோவணம் கட்டிக்கொண்டு கழுதையைத்தான் மேய்த்துகொண்டிருப்போம்" என்று நூலின் பின்னுரையில் குறிப்பிடுகிறார் பதிப்பாளர் வீ.கீரமணி.

 5. அக்குளுக்கு அநீதி.
     ஆசிரியர் : கு.முருணாநிதி.  சொரமுலி வெளியீடு.


    திருவாரூரில் திருட்டு ரயில் ஏறியதிலிருந்து நாளது ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை தனது 75 வருட பங்களிப்பை சில்லறை வரலாற்று குறிப்புகளோடு தலையணை சைஸ் புத்தகமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். இவர் ஏற்கனவே விரலோவியம், கல்தோப்பிய பூங்கா போன்ற தலையணைகளை எழுதியவர்.

 6. வாழ்க்கை சாவதற்கே.
     ஆசிரியர் : முனைவர் தூக்கு மரத்தான்.   பரலோக பதிப்பகம் வெளியீடு.


    வாழ்க்கை என்பதே துயரமானது. விடியற்காலை 9 மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்தது முதல், நள்ளிரவு 7 மணிக்கு தூங்க செல்வது வரை அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் சகலவிதமான அவலங்களையும் பட்டியலிட்டு , முடிவாக இவ்வளவு கேடுகெட்ட ஈனத்தனமான வாழ்க்கை தேவைதானா ? என நம்மை யோசிக்க வைத்து , இறுதியில் தற்கொலையே வாழ்க்கையைவிட சிறந்தது என்ற முடிவுக்கு நம்மை இட்டு செல்லும் அற்புதமான அவநம்பிக்கை நூல்.

 7. டுமீல் ஓல கழுதை புலிகளின் வீர வரலாறு.
     ஆசிரியர் : காய். மடுநேரன்.   ஹ்யூமன் பாம் பப்ளிசர்ஸ்.

  
     "தனி டுமீல் ஓலம்" கோரி கடந்த 40 வருடங்களாக டுமீல் மக்களின் முதுகுகளுக்கு பின்னால் பத்திரமாக ஒளிந்துகொண்டு எதிரிகளோடு அவ்வப்போது சகோதர உறவு கொண்டாடி இறுதிநாளில் "தப்பித்தோம் பிழைத்தோம்" என்று ஓட்டமெடுத்தபோது எதிரிகளால் கோழைத்தனமாக முதுகில் சுட்டுக்கொல்லப்பட்டு "மாவீரர்களாக" மாறிய டுமீல் ஓல கழுதை புலி இயக்கத்தின் வீர வரலாறு. நூலாசிரியர் டுமீல் தேசிய இயக்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 8. கண நேர கற்பிதங்கள் (கவிதை தொகுப்பு)
     ஆசிரியர் : கவிப்பேரரசர் கருவாடுதாசன்.   யாத்தே பதிப்பகம்.


    டுமீல் மொழியின் ஆகச்சிறந்த கவிஞர் கவிப்பேரரசர் கருவாடுதாசன். டுமீல் மொழியை அவர் கையாளும் லாவகம் வேறெவருக்கும் வாய்ப்பது அரிது. உதாரணத்திற்கு புத்தகத்தில் இடம்பெற்ற கீழ்க்கண்ட கவிதையே சாட்சி.

    " லிக்விடேட்டரில் இருந்து புறப்பட்ட புகை ஒன்று
      காற்றின் தீராத பக்கங்களில்
      ஒரு கொசுவின் சாவை எழுதி செல்கிறது".

 9. முதுகை சொறிய முன்னூறு வழிகள்.
     ஆசிரியர் குழு.      மினிமேகலை பிரசுரம்.


    மனிதனால் எளிதாக செய்ய முடியாத காரியம் முதுகு சொறிவது. அவசர காரியமாக (அதாவது "தம்"அடிக்க) வெளியே கிளம்பும்போதுதான் நடுமுதுகு பயங்கரமாக அரிக்கும். ஆனால், எவ்வளவு முயன்றாலும் நடுமுதுகின் பல பிராந்தியங்கள் நமது விரல் நகங்களுக்கு எட்டாத தொலைவில் இருந்து தொலைப்பதால் முதுகு சொறிந்துவிடுவதற்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிடுகிறது. அந்த அசம்பாவிதத்தை தவிர்க்க பல அரிய ஐடியாக்களை கொடுத்து சுகமாய் முதுகு சொறிந்துகொள்ள பேருதவி செய்கிறது இந்த புத்தகம்.

 10. ஷெனாயும் சேட்டு குட்டியும்.
      இயக்குனர் குஸ்கின்.(திரைக்கதை வசனம் & இலவச DVD.)


      கொங்கனி மொழி பேசும் ஷெனாய் இன ஹீரோ சேட்டு (ஆத்து) "குட்டி"யை துரத்தோ துரத்தென்று துரத்தி, லவ்வோ லவ்வென்று லவ்வுகிறார். உலக சினிமாக்களில் இதுவரை சொல்லப்படாத கதை. இசை பழைய ராஜா. படத்தின் கதையை கேட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதும், அதையும் மிஞ்சும் வகையில் படத்தின் இயக்குனர் வீதி வீதியாக சென்று போஸ்டர் ஒட்டியதும் 2013 -இன் சுவாரசிய நிகழ்வுகள்.


                                        -இப்படிக்கு தங்கள் பொய்மையுள்ள,
                                          புனித சாத்தான்.




     .