Friday 6 December 2013

பழைய கதைடா பேராண்டி....!!!



  • இணைய உலகம் விசித்திரங்கள் ஆயிரம் கொண்டது.இல்லையெனில் ஒரு காமிக்ஸ் வலைதளத்தில் இம்மாதிரியெல்லாம் விவாதங்கள் நடைபெறுமா...?

    கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் உள்ள கட்டற்ற சுதந்திரத்திற்கு உதாரணமாக கீழ்க்கண்ட விவாதங்களை தாராளமாக குறிப்பிடலாம்!

    அமெரிக்க சிவப்பிந்தியரில் ஆரம்பித்து,மெக்சிகோ சலவைக்காரியில் முடிந்த அந்த சுவாரஸ்ய வாத-பிரதிவாதங்கள் இதோ....!!!

    அதற்கு முன் லக்கி லுக்கின் புரட்சி தீ இதழில் இடம்பெற்ற ஹாஜி அலியின் (HADJI அலி) ஒரிஜினல் புகைப்படத்தை பார்த்துவிடலாமே...!



                                              மனைவியுடன் ஹாஜி அலி !!!           


    அடுத்து அதே இதழில் இடம்பெறும் பத்திரிக்கையாளர் ஹோராஸ் க்ரீலியின் (HORACE GREELEY ) ஒரிஜினல் புகைப்படம் இதோ....!!!

       
           
                                   அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக...       



                                   
                                               நினைவு தபால் கவர்...

           
                                   ஹோராஸ் க்ரீலி இங்கே தான் துயில்கிறார்....!!!                                      

    எனது கௌபாய் காதலுக்கு வித்திட்டது ராணி காமிக்ஸ் என்றால், அதை நீர் ஊற்றி விருட்சமாய் வளர்த்தது லயன் என்பதில் சற்றும் ஐயம் இல்லை! நண்பர் captiger மேலே சொன்னது போல - கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்படும் செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கும் ஈர்ப்பு அதிகம்! :) அதனாலேயே அவர்களுக்காக பரிந்து பேசும் டெக்ஸ் & ப்ளூபெர்ரியை நாம் கொண்டாடுகிறோம்! தவிர, spaghetti western படங்களும் ஒரு முக்கிய காரணமே!! தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் அவர்களுக்கும் அவரை வைத்து பல கௌபாய் (unintentional காமெடி) காவியங்களை இயக்கிய இயக்குனர் திரு.M.கர்ணன் அவர்களுக்கும் இதில் சிறு பங்கு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை! :)

    நமது NBS இதழைக் காணும் ஐரோப்பிய பதிப்பகத்தாரின் First Impressions என்ன என்பதை அறிய விரும்புகிறேன்! புதிய நாயகர்களோடு திரும்ப வாழ்த்துக்கள்!
  • டியர் கார்த்திக்!!!
    /// கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்படும் செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கும் ஈர்ப்பு அதிகம்! :) ////
    இது புரிந்து கொள்ளக்கூடியதே.என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யமான சிக்கல் இருக்கிறது.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.
    சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான கொடிய பழக்க வழக்கங்கள் நிலவினஎன்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் கொலைவெறி தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.இன்றைய அமெரிக்காவின் பெரும் முன்னேற்றத்துக்கு காரணம் அன்றைய குடியேற்றங்களே !
    புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் ,new york tribune நிறுவனர்களில் ஒருவருமான ஹோராஸ் க்ரீலி (horace greeley)பின்வருமாறு கூறினார்."மேற்கு நோக்கி செல் இளைஞனே!தேசத்தோடு சேர்ந்து வளர்!"
    கடவுளாலேயே கைவிடப்பட்ட ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் ஏராளமான வெள்ளையர்களின் "மண்டை தொலிகளும்"கலந்திருக்கின்றன என்பதை "அமெரிக்க கனவில்"வாழும் இந்திய இளைஞர்கள் புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்பது அடியேனின் அபிப்ராயம்.
    Delete
  • நீங்கள் சொல்வது போல இன்றைய நாகரீக ஆடம்பர அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணமானவர்கள்தான் வெள்ளையினத்தவரே , ஆனால் ஒரு மண்ணின் மைந்தர்களை அடிவேரோடு அழித்து அவர்கள் சொந்தபூமி மீது கட்டமைக்கபட்டதே இன்றைய அமெரிக்கா!
  • அன்பின் சோமசுந்தரம்,

    நான் உங்களிடம் சில சுவாரசியமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன்! :)

    1. முதலில் ஜாலியாய் ஒரு கேள்வி:
    நான் 'எனக்கு செவ்விந்தியர்கள் மீதான ஈர்ப்பு அதிகம்' என்று மட்டும்தானே சொல்லியிருந்தேன் - அதற்க்கான காரணங்களை சொல்லவில்லையே?! :) செவ்விந்தியர்கள் / பூர்வகுடிகள் / வெள்ளையர்கள் குறித்த நீண்டதொரு எண்ணத்தை நமது வாசக நண்பர் cap tiger-தானே பகிர்ந்திருக்கிறார்?! நியாமாக பார்த்தால் இது குறித்த உங்களின் பார்வையை நண்பர் cap tiger-இடம் அல்லவா முன்வைத்திருக்க வேண்டும்?! ;)

    2. சிவப்பு, மஞ்சள் & கருப்பு - வண்ணமயமாக ஒரு கேள்வி!:
    செவ்விந்தியர்கள் 'கிட்டத்தட்ட' முற்றிலும் 'அழிக்கப்பட்டது' குறித்த உங்கள் கருத்து என்ன? தாங்கள் இப்போது சிலாகிக்கும் அமெரிக்க அசுர வளர்ச்சியின் பின்னால் பல வெள்ளை மண்டைத் தொலிகள் உரிந்துள்ளன என்று உச்சுக் கொட்டும் நீங்கள், அந்த வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி, உழைப்பை உறிஞ்சி நசுக்கிக் கொன்ற லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களை பற்றி என்றேனும் கவலை கொண்டதுண்டா? சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருந்தும் அடிமை முறையில் அமெரிக்காவிற்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் பல இலட்சம் - இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

    3. கடினமான ஒரு கலாச்சாரக் கேள்வி:
    "அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிக்கும் ஜார்வா மற்றும் இதர பழங்குடியினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என்றாலும் கலாசாரம் / பண்பாடு என்ற பெயரில் இன்னமும் வளர்ச்சியின்றி பின்தங்கியே உள்ளனர்! அவர்களை எல்லாம் அழித்து விட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் நாகரிகமடைந்த இந்தியர்களை குடியேற்றப் போகிறோம்" என்று நமது இந்திய அரசாங்கம் அதிரடி முடிவெடுத்தால் நீங்கள் அதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?! இந்த கேள்விக்கு கீழ்க்கண்ட இரு வேறு பார்வைகளில் இருந்து பதிலளியுங்கள்!
    3a. நாகரீகத்தில் முன்னேற்றம் கண்ட ஒரு இந்தியராக / தமிழராக!
    3b. அந்த அந்தமான் பூர்வகுடி மக்களில் ஒருவராக!

    4. கடைசியாக விவகாரமாய் ஒரு கேள்வி!:
    இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே, கோபித்துக் கொள்ளக் கூடாது! காலம் காலமாய் உங்கள் மூதாதையர் வழி வந்த சொத்தாக உங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! அதன் நடுவில் நீங்கள் வழிபடும் குலதெய்வத்தின் ஒரு அழகிய கோயிலும் இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்! உங்கள் பரம்பரைக்கென்று இருக்கும் சில சம்பிரதாயங்களை பின்பற்றி நீங்கள் உற்றோர் உறவினருடன் மகிழ்வுடன் வாழ்ந்து வரும் அந்நிலையில் திடீரென ஒரு முரட்டுக் கும்பல் உங்கள் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, உங்கள் சம்பிரதாயங்கள் மூடத்தனமாக உள்ளன; உடனே இடத்தை காலி செய்யுங்கள்; நாங்கள் இந்த இடத்தை தரைமட்டமாக்கி தொழிற்சாலை ஒன்று நிறுவி இந்த இடத்தை முன்னேற்றப் போகிறோம் என்று துப்பாக்கி முனையில் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் மிரட்டினால் நீங்கள் அவர்களின் மண்டைத் தொலியை உரிக்க முயற்சிப்பீர்களா? இல்லை, 'அப்படியே ஆகட்டும் அய்யா' என்று மகிழ்ச்சியுடன் நடையைக் கட்டுவீர்களா?

    இவற்றிற்கு நீங்கள் பதில் அளித்த பின்னர் உங்களின் செவ்விந்திய / வெள்ளையர்கள் பார்வை குறித்த என் பார்வைகளை பகிர்கிறேன்! :)

    அன்புடன்,
    கார்த்திக்
  • ஆஹா, சூடு பிடிச்சிருச்சு!

    ஓ.... சாத்...தா...னோ...வ்....
  • ///இது புரிந்து கொள்ளக்கூடியதே.என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யமான சிக்கல் இருக்கிறது.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.
    சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான கொடிய பழக்க வழக்கங்கள் நிலவினஎன்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் கொலைவெறி தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.இன்றைய அமெரிக்காவின் பெரும் முன்னேற்றத்துக்கு காரணம் அன்றைய குடியேற்றங்களே !///

    ஒரு அந்நிய நாட்டார் சொன்ன பழமொழி தான் ஞாபகம் வருகிறது

    '' பொது மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தை திருடும் திருடனை சட்டம் கடுமையாக தண்டிக்கிறது ஆனால் அந்த வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தையே திருடும் கொள்ளைகாரனை சட்டம் போற்றி பாதுகாக்கிறது "
  • அந்த அந்நிய நாட்டார் எத்தனை வாத்துக்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்தாரோ !
  • ஒரு கிலோ வாத்துக்கறி என்ன விலை, ராஜா அவர்களே? :)
  • டியர் கார்த்திக்!
    உங்கள் இரண்டாவது கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறேன்.///செவ்விந்தியர்கள் 'கிட்டத்தட்ட' முற்றிலும் 'அழிக்கப்பட்டது' குறித்த உங்கள் கருத்து என்ன? ///
    இது முற்றிலும் தவறான தகவல்.அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!
    ஏதோ அடிமைமுறையை உருவாக்கியவர்களே ஐரோப்பியர்கள்தான் என்பது போல் பேசுவது தவறு.உலகம் முழுதும் பன்னெடுங்காலமாக பல்வேறு இனக்குளுக்களிலும் அடிமை முறை இருந்துள்ளது.அரபு நாடுகளில் ஆப்பிரிக்க கருப்பர்களை பொது இடங்களில் வைத்து "அடிமை சந்தை"நடத்திய வரலாறு உண்டு.அமெரிக்காவில் அடிமை முறைக்கு வெள்ளையர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்ததும் ,அதன் தொடர்ச்சியாக அடிமை ஒழிப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டதும் நீங்கள் அறியாத ஒன்றல்லவே!!
    "நேரடியான அடிமைமுறை என்பது ஆலைகளுக்கு இயந்திரம் போல முக்கியமானது.அடிமை முறை இல்லாமல் உங்களுக்கு பருத்தி (காட்டன்)கிடையாது.பருத்தி இல்லாமல் நவீன ஆலைகள் இல்லை.அடிமைமுறையே காலனிகளுக்கு மரியாதை அளிக்கிறது.காலனிகளே உலக வர்த்தகத்தை உருவாக்கியுள்ளன.உலக வர்த்தகமே பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.எனவே,அடிமை முறை என்பது மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு பொருளாதார வகைப்பாடு ஆகும்.உலக நாடுகளிலேயே முற்போக்கான நாடான அமெரிக்கா .அடிமைமுறை இல்லையென்றால் பிற்போக்குதனத்தில் மூழ்கிவிடும்.அமெரிக்கா இல்லையென்றால் நவீன வர்த்தகமும் பண்பாடும் இல்லாமல் போய்விடும்."
    மேற்கண்ட கருத்தை உரைத்தவர் மேற்குலக வெள்ளை பண்ணையாளரோ ,வெள்ளை இனவெறி கு-க்ளக்ஸ்-க்ளான் ஆசாமியோ அல்ல.கம்யூனிச முற்போக்கு(!)வாதிகளின் குலகுருவான கார்ல் மார்க்ஸ் !!!
    மூன்றாவது கேள்விக்கு பதில்;பழங்குடிகளை நாம் ஏன் அழிக்கவேண்டும்?அந்த வேலையை செய்யத்தான் மாவோயிஸ்ட்கள் இருக்கிறார்களே!!
    நான்காவது கேள்விக்கு பதில்;அம்மாதிரியான "நில அபகரிப்பு"கடந்த ஆட்சியில் சகஜமாக நடந்தது."அம்மா"ஆட்சியில் இல்லை.அப்படியே என் நிலம் அபகரிக்க பட்டாலும் சட்டபூர்வமாகவே போராடுவேனே தவிர மண்டைதொலி உறிப்பு போன்ற காட்டுமிராண்டிதனத்தில் இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே!!
    இறுதியாக முதல் கேள்விக்கு அடியேனின் பதில்; cap tiger என்ற பெயரை பார்த்ததும் ,அவர் உங்கள் facebook நண்பர் ஷி-நா-பா -வாக இருப்பாரோ என்று பயந்துவிட்டேன்.ஹிஹி!
    Delete
  • //சட்டபூர்வமாகவே போராடுவேனே//! ஆஹா! அந்த சட்டங்களை அமைப்பவரே தவறுகள் செய்பவர்கள்தானே?? அதான் நம்மூர்ல சாத்தானே வேதம் ஓதுகிறது என்பார்களே, அதுமாதிரி! ஹிஹி!
    //காட்டுமிராண்டிதனத்தில் இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே!!// எல்லா சுதந்திரங்களையும் கொண்டுள்ள நமக்கு, தம் தாய்நாட்டுக்காக போராடுபவர் காட்டுமிராண்டிகளாக தெரிவார்களோ??
    //அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!// அந்த மாதிரி ரிசர்வ் பகுதிகள் என்னவென்றால் முள்வேலியில் குடியமர்த்தபட்ட இலங்கை தமிழர் நிலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். மேலும் அவர்கள் அந்த பகுதிகளில் கீழ்தரமாக நடத்தப்பட்டதற்கு , ஹாலிவுட் நடிகர் மர்லன் ப்ராண்டோ தனக்கு அளிக்கபடவிருந்த ஆஸ்கர் விருதை புறகணித்தார் என்பது வரலாறு!
  • saint ஜி, நான் cap tiger தான், ஆனா, tsi na pah கெடையாது! :)
  • வெள்ளையரிடம் மேம்பட்ட ஆயுதங்கள் இருந்தன !சூட்சும உத்திகள் இருந்தன !!இவை ஏதும் இல்லாமல் ஏதும் பண்ண இயலாமல் ,ஆத்திரத்தில் ,கோவத்தில் செவிந்தியர்கள் இவ்வாறு நடந்திருக்கலாம் ! பண்பாடு தெரிந்த,கலாச்சாரம் மிக்க ,நாகரீக காட்டு மிராண்டி அமெரிக்காதான் கோபத்தில் ,சும்மா இருந்த தங்களை சீண்டி பார்த்த ஜப்பானியரை ,தோல்வி பயத்தில் ,கோபம் கண்ணை மறைக்க அணுகுண்டை தூவி கொன்று குவித்தது! இவர்கள் மட்டும் செவிந்திய குடியிருப்புகளை ஆக்கிரமிக்கலாம் !இன்று உலக காவலனாக காட்டி கொண்டு எல்லை தாண்டி, எல்லை மீறுகிறது !வல்லான் வகுத்ததே வாய்க்கால் !அமெரிக்காவில்,ஐரோப்பாவில் கொடும் தண்டனைகள் இல்லையா !ஐரோப்பிய வரலாறு தங்களுக்கு தெரியாததா !
    அடிமை முறை இல்லாமலும் இவை அனைத்தும் தயாராகும் நண்பரே வயிறு பசித்தால் !

    //இது முற்றிலும் தவறான தகவல்.அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!//

    அதாவது நீ நெல் கொண்டு வா,நான் உமி கொண்டு வருகிறேன் ,இடித்து ஊதி ஊதி திங்கலாம் என்பது இதுதானே !

    தகுதி உள்ளன தப்பி பிழைக்கும் !எதிரியை பயமுறுத்து !இவை இயற்கை நண்பரே !!
    உயிர் வாழ தங்கள் தகுதியை வளர்த்து கொள்ள செவிந்தியர்களுக்கு இயலவில்லை !அதுவே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் !
  • நண்பர் சோமசுந்தரம் அவர்களே :)

    மேற்கோள்களுடன் கூடிய உங்களுடைய தெளிவான பதில்களுக்கு நன்றி!!! :) அமெரிக்காவில் தொடங்கி, கம்யூனிசம் மாவோயிஸம் என பயணித்து இறுதியில் அம்மா அவர்களின் ஆட்சி வரை புள்ளி விவரங்களுடன் பேசும் உங்கள் உலக மற்றும் உள்ளூர் அரசியல் ஞானம் என்னை புல்லரிக்க வைக்கிறது! பாராட்டுக்கள்! :) :)

    அடிமைமுறை இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறது என்ற உண்மையை நான் மறுக்கவில்லை. அடிமை முறை என்ற பிற்போக்குத்தனம் அடித்தளமாய் அமைந்திராவிடில் தற்போதைய முற்போக்கு அமெரிக்கா இல்லை என்ற உண்மையை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள்! இதன் அடிப்படையில் பார்த்தால் ஜெர்மனி உலகப் போரின் போது நிகழ்த்திய கொடூரங்களும், ஆக்கிரமிப்புகளும், இன ஒழிப்பும் உங்கள் பார்வையில் நியாயமானவைதான் இல்லையா?! அவர்களும் தங்கள் இனத்தை முன்னேற்றத்தானே மற்ற இனங்களை அடிமைப்படுத்த எண்ணினர்?! செவ்விந்தியர்கள் போலவே யூதர்களும் ஒன்றும் ஒட்டு மொத்தமாய் அழிந்து போய் விடவில்லையே?! பல நாடுகளில் சிதறுண்டு இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள், இல்லையா?! நாகரிகத்தில் / தொழில்நுட்பத்தில் வெகுவாய் முன்னேற்றம் கண்டிருந்த நாஜி ஜெர்மானியர்கள் நிகழ்த்திய ஹோலோகாஸ்ட் - மண்டைத்தொலி உரிப்பதை விட ஒன்றும் கொடூரமான செயல் அல்ல, இல்லையா?!

    அதே போல அமெரிக்கா அணுகுண்டு வீசி இரண்டு ஜப்பானிய நகரங்களை அழித்ததும் உங்கள் பார்வையில் காட்டுமிராண்டித்தனமான செயல் இல்லை, அல்லவா?! அந்நிகழ்வுக்கு முன்னர் ஜப்பானியர்களும் சளைத்தவர்களாக இருந்திடவில்லை என்பது வேறு விஷயம்! ஆக்கிரமிப்பு பற்றி இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்! அறிவியல் முன்னேற்றம் கண்ட மனிதர்கள் நவீன ஆயுதங்களின் உதவியுடன் தங்கள் பிரதேசத்தை / எல்லையை பாதுகாக்கப் போராடினால் அதற்குப் பெயர் போர்! பூர்வகுடிகள் தங்களுக்கு தெரிந்த வகையில் போராடினால் அது காட்டுமிராண்டித்தனம், இல்லையா?!

    சரி விடுங்கள்!!! அடிமை முறை / இன ஒழிப்பு குறித்த உங்களின் 'யதார்த்தமான' பார்வை இதுதான் என்றால் அது பற்றி நான் மேற்கொண்டு இங்கே விவாதிக்க விரும்பவில்லை! :) இருந்தாலும் நான் உறுதி அளித்திருந்தபடி உங்கள் பார்வை குறித்த என் பார்வை இதுதான்! தங்கள் நிலத்திற்காக போராடிய செவ்விந்தியர்கள் கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என்றால் அவர்களை அத்து மீறி சுட்டு வீழ்த்திய வெள்ளையர்களும் அப்படிப்பட்டவர்களே! இன்றைய அமெரிக்க முன்னேற்றத்திற்கு அன்றைய குடியேற்றங்கள்தான் காரணம் என்றாலும் அவர்கள் இழைத்த குற்றங்களை எவரும் எளிதில் மறந்துவிடலாகாது! அன்றைய வெள்ளையர்களுக்கு இன்றைய அமெரிக்காவில் எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அவர்களால் நசுக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கும், அடிமைகளுக்கும் இருக்கிறது!

    கடைசியாக ஒரு சிந்தனைத் துளி! செவ்விந்தியர்கள் குறித்த நமது அறிதலானது, மேலைநாட்டவர்கள் எழுதி வைத்த வரலாறு, அவர்கள் படைத்த காமிக்ஸ் மற்றும் திரைப்படங்கள் - இவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது! இந்தத் தகவல்கள் முழுமையானதாகவோ, நடுநிலைமையானதாகவோ இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!

    //இறுதியாக முதல் கேள்விக்கு அடியேனின் பதில்; cap tiger என்ற பெயரை பார்த்ததும் ,அவர் உங்கள் facebook நண்பர் ஷி-நா-பா -வாக இருப்பாரோ என்று பயந்துவிட்டேன்.ஹிஹி!
    ஹாஸ்யமான உங்கள் பதிலை மிகவும் ரசித்தேன்! :) நேற்று நீங்கள் முதன் முதலாய் எனக்கு எழுதிய நீண்ட பின்னூட்டத்தைக் கண்டதும், உங்கள் வலைப்பூ நண்பர் ம-ம -தான் மீண்டும் என்னுடன் வாதம் செய்ய வந்திட்டாரோ என்று நானும் சற்று பயந்துதான் போய்விட்டேன்! ;) பிறகு உங்களின் பெயர் கண்டு அச்சம் தெளிந்தேன்! :) :)

    ***

    @ஆடிட்டர் ராஜா: உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி - உண்மையில் மிக அருமையான பழமொழி அது!

    @ஸ்டீல் க்ளா: உங்களுக்கும் மிக்க நன்றி! ஆனால் நீங்கள் இட்ட அந்த கருத்து ஏனோ காணாமல் போய் விட்டது! :)

    @cap tiger: நன்றி நண்பரே! :)

    @விஜய்: உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி! ;) வலைப்பூ இன்னும் தொடங்கவில்லையா?! (நாங்களும் ஊக்குவிப்போம்ல!) :D
  • காலம் வலிமையானவனுக்கே சொந்தம்,பிறர் யாரும் அவனை அண்டி பிழைப்பதோ,அனுசரித்து போவதோ நலம் !இல்லையெனில் காணாமல் போவாய்,இதுதான் காலம் முழுதும் நடந்து வருகிறது !அங்கங்கு தேவையான முகமூடி அணிந்து கொள்கிறோம் நம்மை நிலை நிறுத்தி கொள்ள !
  • //அதாவது நீ நெல் கொண்டு வா,நான் உமி கொண்டு வருகிறேன் ,இடித்து ஊதி ஊதி திங்கலாம் என்பது இதுதானே !//
    ஹா ஹா ஹா, சரியாக சொன்னீர்கள் ஸ்டீல் க்ளா! :)
  • பெரும்பாலும் நண்பர் புனித சாத்தானோடு உடன்படும் நான் , இம்முறை கடுமையாக மாறுபடுகிறேன்......

    நண்பர்களே....

    உலகம் முழுக்க வெள்ளையர்கள் குடியேற்றம் என்பது பூர்வ குடிகளை அழித்தே நிகழ்ந்தது........அதிலும் ஸ்பானியர்கள் மிகக்கொடியவர்கள்......மதன் அவர்கள் எழுதிய [ மனிதனுக்குள் ஒரு மிருகம் ? ] புத்தகம் ஒன்றில் ஸ்பானிய தளபதி பிஸாரோ தன்னை வரவேற்க வந்த மாயன் மன்னர் அட்வால்பாவை எப்படி தந்திரமாக சிறைப்படுத்தி படுகொலை செய்தான் என்பதை விவரித்திருப்பார்....கல் நெஞ்சையும் கரைய வைக்கும் கொடூரம் அது.....................செய்யும் காட்டுமிராண்டித்தனங்களை வெள்ளையர்கள் செய்துவிட்டு நாகரீகத்தில் சிறந்து விளங்கிய மாய‌ன்களை
    காட்டுமிரான்டிகளாக சித்தரித்து ''அபோகலிப்டோ '' போன்ற படங்களை எடுப்பதுவெள்ளையர்களுக்கு மட்டுமே உரித்தான‌ அயோக்கியத்தனம்.......


    ஆஸ்திரேலிய பழங்குடிகளான அபாரிஜின்ஸ் இன்று கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர்........அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்கள் தப்பிப்பிழைத்தவர்கள்........

    ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வது உண்மை என்றுவைத்துக்கொண்டால் , வெள்ளையர்கள் வராவிட்டால் நாமும் காட்டுமிரான்டிகளாக இருந்திருப்போமா என்ன?
  • நண்பரே ,புனித சாத்தான் நம் அனைவருக்குமே நண்பரே ,மேலும் அவர் எனது நெருங்கிய நண்பர் கூட அவரது கருத்துக்களே இங்கே எதிர் .......முகம் பார்க்க வேண்டாம் ,கருத்துக்களை மட்டுமே பார்ப்போம் ,மனதில் பட்டதை தயங்காமல் முன் வையுங்கள்.......
  • டியர் கார்த்திக்,
    நமது விவாதம் கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கும்போலிருக்கிறது.நீங்கள் குறிப்பிட்ட ஜெர்மானியர் -யூதர் பிரச்னையை இந்த இடத்தில் நியாயமாய் நான் தான் உதாரணம் காட்டவேண்டும்.அமெரிக்காவின் பூர்வகுடிகள் சிவப்பிந்தியர்.வெள்ளையர் வந்தேறிகள் என்கிற உங்கள் வாதத்தில் சற்று நாஜிவாடை அடிக்கிறது.நாஜிகள் பாலஸ்தீனத்திலிருந்து வந்த "வந்தேறிகளான யூதர்கள்"நம்மை அதிகாரம் செய்வதா?என்று பிரச்சாரம் செய்து தங்கள் அரசியலை நடத்தினார்கள்.அதன் கொடூர விளைவே ஹோலோகாஸ்ட் .ஆனால்,யூதர்கள் ஒன்றும் தெரியாத அம்மாஞ்சிகள் அல்லவே.தற்போதய அமெரிக்க தேசத்தையும்,உலக வர்த்தக அமைப்புகளையும் ஆள்பவர்கள் பெரும்பாலும் யூதர்களே!!google ,facebook ஆகியவற்றின் பிதாமகர்கள் இவர்களே!!
    ஒரு நாட்டில் பூர்வ குடிகள் மட்டுமே வாழவேண்டும்.மற்ற வந்தேறிகள் வெளியேறவேண்டும் என்றால் நமது புண்ணிய தேசத்தில் எண் பது சதவீதம் பேர் வெளியேற வேண்டியதுதான்.
    அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்கள்,விஞ்ஞான கருவிகள்,விமானம்,ரயில்,கம்ப்யூட்டர் தொலைபேசி இன்னபிற லொட்டு லொசுக்குகளை உருவாக்கியவர்கள் அமெரிக்கர்களே.நாமோ இவற்றையெல்லாம் ஜாலியாக அனுபவித்துக்கொண்டு மனம்போனபடி அமெரிக்கர்களை வசைபாடுகிறோம்.

    இந்தியர்கள் நன்றியுடையவர்கள்.ஹிஹி!!

    Delete
  • ஜெர்மானியர்கள் அடிமைப்படுத்தியது யூதர்களை மட்டுமல்லவே?! :) சரி இந்த நாஜி வாடை, பஜ்ஜி வாடையை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள்! நான் இந்த விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை என்று முன்னரே சொல்லி விட்டேன் நண்பரே! :) மாவோயிசம், நாஸிசம், கேபிடலிசம் என வகை வகையாக பிளந்து கட்டும் நீங்கள் உங்கள் வாதங்களை, சும்மா போய்க் கொண்டிருந்த என்னை மட்டும் இழுத்து வைத்து அடுக்குவானேன்?! :) :) :) இதுதான் சாத்தானிசமோ?! ;) செவ்விந்தியர்களை பிடிக்கும் என்று சொன்னது 'சாத்தான் குற்றமா'?! ;) அப்படியே உங்கள் வாதத் திறமைகளை நண்பர் cap tiger, ஸ்டீல் க்ளா, ஆடிட்டர் ராஜா, சிவ சரவணக்குமார் போன்ற மற்ற நண்பர்களிடமும் காட்டலாமே?! :) :) :) அவர்களுக்கு இன்னமும் ஒரு பதில் கூட சொல்லவில்லையே நீங்கள்? இது பாவமில்லையா?! :D
  • என்ன சாத்தான் ஜி?? கார்த்திக்கு மட்டும் பதிலுரைக்கிறீர்கள்? நாஜிவாடை என்றெல்லாம் வேறு! பூர்வகுடிகள், வந்தேறிகள் என்று ஆரம்பித்ததே நாந்தான். கார்த்திக் கௌபாய்களை விட செவ்விந்தியர்களே மிகவும் கவர்கிறார்கள் என்று கூறினார், மண்டைதொலி உரித்த்து எனக்கு பிடித்திருக்கு என்றெல்லாம் சொல்லவில்லை . இதிலென்ன தவறு கண்டீர்களோ? செவ்விந்தியர்களுக்கு ஆதரவாக பலபேர் இங்கு பதிலிட்டுள்ளார்கள், என்னையும் சேர்த்து.ஆனால் நாங்கள் யாருமே யுத்தமுறைகளையோ, கையாண்ட வன்முறைகளையோ சொல்லவில்லை. பொதுவாக கௌபாய் கதைகள் என்றாலே பெரும்பாலும் ராணி காமிக்ஸில் வங்கிகொள்ளைகள், சூதாட்டங்கள், கொலைகள் துப்பறிதல் என்று மேற்கத்திய உலகின் ஒரு பகுதியை மட்டுமே நமக்கு வழங்கிவந்தனர்(நான் படித்தவரையில்) ஆனால் டெக்ஸ், மற்றும் டைகர் கதைகள் லயன்/முத்து மூலமாக நமக்கு அறிமுகமான பிற்பாடே செவ்விந்தியர்கள் என்ற சமூகமும், அவர்களே அம்மண்ணின் பூர்வகுடிகள் என்பதும் தெரிய ஆரம்பித்தன. அதுலும் கூட கோசைஸ் என்ற செவ்விந்திய தலைவர் கடைசியில் தம் மக்களுக்காக துப்பாக்கியுடன் தனிமையில் இறந்துகிடப்பதாக டைகர் கதையில் வரும்( உண்மையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கபடும் கோசைஸ் பிற்பாடு ராணுவமுற்றுகையால், வேறுவழியில்லாமல் பட்டினி கிடந்த தம் மக்களுக்காக சரணடைந்து இறுதியில் ஒரு அப்பாச்சே ரிசர்வ் முகாமில் நோய்வாய்பட்டு இறக்கிறார்) இந்தியாவின் வந்தேறிகளை இங்கே யாரும் வெளியேற சொல்லவில்லை. பூர்வகுடிகளான நாம், இன்னொரு தேசத்தின் பூர்வகுடிகளை மதிக்கவாவது செய்வோம் என்றே சொல்லி கொள்கிறேன்!
  • டியர்ஸ் கார்த்திக்,cap tiger,ஸ்டீல் க்ளா,சிவ.சரவணகுமார்,மற்றும் கணக்கரசர் அவர்களே!!!
    நான் ஒன்றும் சிவப்பிந்தியருக்கு எதிரியல்ல.நம்மில் பலர் சிவப்பிந்தியரை ஆதரிக்கும் சாக்கில் மனிதாபிமானமற்ற முறையில் வெள்ளையர்களை "வந்தேறிகள்"என வசைபாடுவதைதான் எதிர்க்கிறேன்.வெள்ளையர்கள் வந்தேறிகள் என்றால் காஸ்ட்ரோ,சே போன்றவர்களும் ஸ்பானிஸ்காரர்கள் தானே!!
    அவர்களும் உங்கள் பார்வையில் வந்தேறிகளோ?
    வெள்ளையர் அமெரிக்காவில் குடியேற்றம் அமைத்த அதே காலக்கட்டத்தில் இந்தியாவிலும் புதிய இனக்குழுக்கள் பல குடியேறின.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின.அவர்களும் உங்கள் பார்வையில் வந்தேறிகளோ?
    ஒரு கண்ணில் வெண்ணை.மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற உங்கள் வாதத்தில் மிக பெரிய "ஓசோன்"ஓட்டை இருக்கிறது.
    Delete
  • சிகப்பாய் ஒரு சொப்பனத்தில் விட இந்த விவாதத்தில் ஆக்சன் அதிகமாக இருக்கும் போல் உள்ளதே...:)
  • டியர் சாத்தான் ஜி!
    பூர்விகக்குடிகள் தவிர்த்து எந்த ஒரு நாட்டிலும் புதிதாக் குடியேறியவர்கள் வந்தேறிகள்தான்.இது ஒன்றும் மனிதாபிமானமற்ற சொல் அல்ல! நீங்கள் செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லிய பிறகே இங்கே விவாதம் நீள்கிறது! இரு பக்க வன்முறைகள் பற்றி பேசி கொண்டிருக்கிறோம்! தாங்கள்தான் குழம்பி கொள்கிறீர்கள்! எங்கள் கௌபாய் காமிக்ஸ் ஈர்ப்புக்கான பதில் செவ்விந்தியர்களே! இதில் எந்த தவறும் இல்லையே??
  • எங்கெல்லாம் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகிறஅர்களோ அங்கு மட்டுமே வந்தேறிகள் என்ற வார்த்தை வெருக்கதகுந்த சொல்லாக கருதபடுகிறது .
  • வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டு சுரண்டவில்லையா !செல்வ செழிப்பே,பரந்து விரிந்த வேட்டை நிலங்களே நம்மை ,செவிந்தியர்களை மேற் கொண்டு ஏதும் செய்யாமல் சந்தோசமாக வைத்திருந்தது !ஆனால் விற்பனை சந்தை ,மேய்ச்சல் நிலம் தேவை என்பதும் வறண்ட பகுதிகளுக்கு சொந்தமான அந்நியர்களை கவர காரநமாயிற்று ! அண்டை நாடுகளை வெல்ல உதவி,போர்வைகள்,உற்ச்சாக பானம் , என்று ஆரம்பித்து பின்னர் சுரண்ட ஆரம்பித்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனத்தை மூலைக்கு கொண்டு சேர்த்ததும் ,அழித்தொழித்ததுமே காட்டு மிராண்டித்தனம் !
    ஃபிடல் அவரது மக்களுக்காகத்தானே போராடுகிறார் !செவிந்தியரை பொறுத்த வரை அவர்களை ஒடுக்கிய ,அளித்தொளித்த அனைவருமே குற்றவாளிகள்தாம் !
    பல கண்டு பிடிப்புகளை தந்த அவர்கள் ஆய்த வியாபாரம் ,அந்த கண்டு பிடிப்புகளின் விற்பனை சந்தை என்று இன்னும் மேலும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள் ....பசுமைப்புரட்சி என்று நம்மை ஏமாற்றி ,இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத விற்பனை சரிவடைய ,அவர்களது ரசாயனங்களை விற்பனை செய்ய உரங்களை தந்து நமது நிலங்களை மலடாக்கிய செயல், பிற நாடுகளின் கண்டு பிடிப்புகளுக்கும் உரிமை கோரி அதனும் காசாக்கும் செயல் என இன்னும் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறார்கள்......அவர்களுக்கு ஒரு அமெரிக்கா போதாது !அன்று பஞ்சத்தை போக்க பசுமை புரட்ச்சி உதவியிருக்கலாம் ஆனால் அது தேவை அல்ல என்று இன்று நிரூபிக்க பட்டு வருகிறது !
    மேலும் வரலாறுகள் ஆளும் வர்கத்திற்க்காக திரிக்க படுவதும் உண்டு !நமது நாட்டிலே சிப்பாய் கழகம் என திரிக்க படவில்லையா ........
    ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !
  • செவிந்தியர் யாரும் கதை உருவாக்கி இருந்தால் அங்கே வெள்ளையரை காக்க ஒரு செவிந்திய தலைவர் உருவாகி இருப்பார் !
  • //ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !//

    Valid Point.
  • மைடியர் சாத்தான் ஜி! :)

    நான் வெள்ளையர்கள் வந்தேறிகள் என்பதால் அவர்கள் அமெரிக்காவை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று எங்கேயாவது டயலாக் அடித்தேனா?! :) :) :) அதே போல நான் எந்த விதமான கொச கொச 'இசமும்' இங்கே பேசவில்லை!!! ;)

    நான் சொல்வதெல்லாம் இதைத்தான்:
    //தங்கள் நிலத்திற்காக போராடிய செவ்விந்தியர்கள் கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என்றால் அவர்களை அத்து மீறி சுட்டு வீழ்த்திய வெள்ளையர்களும் அப்படிப்பட்டவர்களே! இன்றைய அமெரிக்க முன்னேற்றத்திற்கு அன்றைய குடியேற்றங்கள்தான் காரணம் என்றாலும் அவர்கள் இழைத்த குற்றங்களை எவரும் எளிதில் மறந்துவிடலாகாது! அன்றைய வெள்ளையர்களுக்கு இன்றைய அமெரிக்காவில் எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அவர்களால் நசுக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கும், அடிமைகளுக்கும் இருக்கிறது!//

    நீங்கள் நடுநிலைமை தவறாதவர் என்பதால் இன்றைய அமெரிக்க முன்னேற்றத்தின் பின்னால் அன்றைய வெள்ளையர்களுக்கு மட்டும் அல்ல - நிலத்தை இழந்த செவ்விந்தியர்களுக்கும், உழைப்பைக் கொட்டிய அடிமைகளுக்கும் அதே அளவு பங்கிருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

    நீங்கள் சொன்னது: //நம்மில் பலர் சிவப்பிந்தியரை ஆதரிக்கும் சாக்கில் மனிதாபிமானமற்ற முறையில் வெள்ளையர்களை "வந்தேறிகள்"என வசைபாடுவதைதான் எதிர்க்கிறேன்//
    மிகச் சரியான கருத்து! :) அப்படியே, வெள்ளையர்களை உயர்த்திக் காட்டும் சாக்கில் சிவப்பிந்தியர்கள் எல்லாம் நாகரிகமற்ற கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என நீங்கள் வசைபாடிய வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்! மேற்கத்தியர்கள் எழுதி வைத்த ஒரு தலை சார்பான வரலாற்றையும் / படைப்புகளையும் இதே வீரியத்துடன் வாதிட்டு எதிர்ப்பீர்கள் என்றும் நம்புகிறேன்! அமெரிக்க வளர்ச்சியின் பிரதிபலன்கள் செவ்விந்தியர்களை முழுதும் சென்றடைய விடாமல் ரிசர்வ் பகுதிகள் என்ற பெயரில் அவர்களை ஒட்டுமொத்தமாய் ஒடுக்கி வைத்துள்ள அவலத்தையும் எதிர்ப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

    //இந்தியர்கள் நன்றியுடையவர்கள்.ஹிஹி!!//
    நம்மைப் போன்ற பல நாடுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுரண்டு சுரண்டு என சுரண்டி, முடிந்த அளவு செல்வத்தை வாரிச் சென்று விட்டு, நம்மை இப்போது மூன்றாம் உலக நாடு என்று (அதாவது ஏழை நாடு என்ற அர்த்தத்தில்) முத்திரை குத்தி அழைத்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம், 230V மின்சாரம்(?!), அரசியல் அமைப்பு இன்னபிற லொட்டு லொசுக்குகளை இன்னமும் கட்டிக்கொண்டு அழும் இந்தியர்கள் நன்றியுடையவர்கள்தான்! மேலைநாட்டவரே என்றாலும் சொந்தமாய் நிதி திரட்டி அணை கட்ட உதவிய பென்னி குக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்துக் கொண்டாடும் தமிழர்களும் நிச்சயம் நன்றி உடையவர்கள்தான்! :)

    @ஸ்டீல் க்ளா:
    //ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !//
    அதாவது நமது வேதாளர் (எ) மாயாவி (எ) Phantom என்ற வெள்ளையர், ஆப்பிரிக்க பூர்வ குடிகளுக்காக தன உயிர்(களை) கொடுத்து தலைமுறை தலைமுறையாக போராடவில்லையா?! அப்படித்தான் இதுவும்! ;) 'மீசையில் மண் ஓட்டினாலும் நாங்க (மட்டும்தான்) எப்பவுமே சூப்பர் ஹீரோஸ்!' :) :) :)
  • //ரிசர்வ் பகுதிகள் என்ற பெயரில் அவர்களை//
    "கொஞ்சமாய் எஞ்சிப் பிழைத்த அவர்களை" என்று திருத்திக் கொள்ளுங்கள்! :)
  • //நம்மைப் போன்ற பல நாடுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுரண்டு சுரண்டு என சுரண்டி, முடிந்த அளவு செல்வத்தை வாரிச் சென்று விட்டு, நம்மை இப்போது மூன்றாம் உலக நாடு என்று (அதாவது ஏழை நாடு என்ற அர்த்தத்தில்) முத்திரை குத்தி அழைத்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம், 230V மின்சாரம்(?!), //
  • உஸ்... யப்பா .... ஒரு ரெண்டு நாள் காணாம போனா இங்கன ஒரு இனப்போரே நடந்து விட்ட பிரமை தோன்றுகிறதே :-)

    காமிக்ஸ் படிக்கலாம் வரீங்களா ? :-) :-)
  • காமிக்ஸ் வந்திருந்தால் இந்த அக்க/வர்க்க போரே தோன்றி இராதே !
  • saria sonnenga steel claw... comics vanthutuntha atha padikkave neram saria irukkumee.. hmm tex vara varaikkum NBS a repeat panna vendiyathu than..
  • @ராகவன்:
    எது? Cowboys Vs Native Indians காமிக்ஸா?! ;)

    இப்படி ஒரு அற்புதமான ஒரு கேள்வியை கேட்டு வைத்து விட்டு ஐரோப்பா கிளம்பிச் சென்ற நம் அன்பிற்குரிய எடிட்டர், அநேகமாக டெக்ஸ் மற்றும் ப்ளூபெர்ரியின் புதிய சாகசங்களை நமக்காக வலை வீசி தேடிக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன்! ஊர் திரும்பியதும் தன் கேள்வியானது, இங்கே ஒரு மாபெரும் செவ்விந்திய 'இனக்கலவரம்' துவங்க மறைமுக காரணமாய் அமைந்தது கண்டு 'மனக்கலவரம்' அடையாமல் இருந்தால் சரிதான்! :)
  • ஹ ...ஹா... ஹா ....அதனால்தான் பிரச்சினைக்குரிய டெக்ஸ் புத்தகத்தை தாமதமாக வழங்க கூறி விட்டார் போலும் !
  • டியர் கார்த்திக்.// வெள்ளையர்களை உயர்த்திக் காட்டும் சாக்கில் சிவப்பிந்தியர்கள் எல்லாம் நாகரிகமற்ற கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என நீங்கள் வசைபாடிய வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!//
    சிவப்பிந்தியர்களை கொலைவெறியர்கள் என்றோ காட்டுமிராண்டிகள் என்றோ நான் எங்கும் குறிப்பிடவில்லை.!!
    ஆனால் நமது நண்பர்கள் பலர் வெள்ளையர்களை கடுமையாக சாடியிருக்கிறார்கள்.எனது ஆரம்ப வரிகள் உண்மையாகிவிட்டன.!!
    //.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.//
    அமெரிக்க பூமியில் முதன்முதலாக விவசாயம் செய்தவர்கள் ஐரோப்பிய குடியேறிகளே!!சிவப்பிந்தியரோ வேட்டையாடும் சமூகமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உழன்று வந்தனர்.இன்றைய அமெரிக்காவின் செல்வ செழிப்பிற்கு ஐரோப்பியரின் கடின உழைப்பே காரணம்.அமெரிக்கா எந்த நாட்டையும் காலனியாக பிடித்து அதை சுரண்டி தன்னை வளர்த்து கொள்ளவில்லை.பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்பெயின்,போர்ச்சுக்கல் போன்ற நாடுகளே இவ்விதம் தங்களை வளர்த்து கொண்டன.எனவே "சுரண்டல்"புகார் அமெரிக்காமீது சுமத்த முடியாது.
    மனித குலத்திற்கு ஏராளமான சேவைகள் செய்த அமெரிக்கர்களுக்கு நாம் மரியாதை செய்யாவிட்டாலும் ,அவதூறு பேசாமலாவது இருக்கலாமே!!!
    Delete
  • நண்பரே அமெரிக்காவும் அடிமையாக இருந்த நாடே !வெள்ளையர்கள்தானே பிரிட்டன்,பிரான்ஸ்... இவர்கள் !
  • பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்பெயின்,போர்ச்சுக்கல் போன்ற நாடுகளே அமெரிக்காவை அமெரிக்கர்களை உருவாக்கின அல்லவா !
  • //சிவப்பிந்தியரோ வேட்டையாடும் சமூகமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உழன்று வந்தனர்.//
    இதற்காக அவர்களை கொன்று குவித்து நாட்டை முன்னேற்றிய இவர்களை.......
  • டியர் சாத்தான் ஜி,

    //சிவப்பிந்தியர்களை கொலைவெறியர்கள் என்றோ காட்டுமிராண்டிகள் என்றோ நான் எங்கும் குறிப்பிடவில்லை.!!//

    இவை நீங்கள் சொன்னவைதான்:
    1. கொடிய பழக்க வழக்கங்கள் & கொலைவெறி தாக்குதல்கள்:
    //சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான "கொடிய பழக்க வழக்கங்கள்" நிலவின என்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் "கொலைவெறி தாக்குதல்களை" எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.//

    2. காட்டுமிராண்டிகள்:
    //மண்டைதொலி உறிப்பு போன்ற "காட்டுமிராண்டிதனத்தில்" இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே//

    ***

    //அமெரிக்கா எந்த நாட்டையும் காலனியாக பிடித்து அதை சுரண்டி தன்னை வளர்த்து கொள்ளவில்லை.பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்பெயின்,போர்ச்சுக்கல் போன்ற நாடுகளே இவ்விதம் தங்களை வளர்த்து கொண்டன.எனவே "சுரண்டல்"புகார் அமெரிக்காமீது சுமத்த முடியாது.//
    குழப்பமான பேச்சு! அமெரிக்கா என்றோ அமெரிக்கர்கள் என்றோ சில நூறு வருடங்கள் முன்பு வரை எதுவும் இருந்ததில்லையே?! அன்றைய ஐரோப்பியர்கள் (நீங்கள் மேலே பட்டியலிட்ட நாட்டவர்களையும் சேர்த்து!) அந்தப் பிரதேசத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்து, கட்டமைத்ததுதானே இன்றைய அமெரிக்கா?! அவர்களின் சந்ததியினர்தானே இன்றைய அமெரிக்கர்கள்?! ஒரு வேளை பிரிட்டிஷார் இந்தியாவிலேயே தங்கி இருந்து, நம்மையும் ரிசர்வ் பகுதிகளில் ஒடுக்கி வைத்து, இந்தியாவை இன்னொரு அமெரிக்காவாக மாற்றியிருந்தால் அப்போது ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவராக உங்களின் கருத்து என்னவாக இருந்திருக்கும்?! அப்படியே பார்த்தாலும் - உங்கள் பாஷையில் சொல்லவேண்டுமானால் இன்றைய அமெரிக்கர்களும், யூதர்களைப் போலவே "ஒன்றும் தெரியாத அம்மாஞ்சிகள் அல்லவே?!". :)

    //மனித குலத்திற்கு ஏராளமான சேவைகள் செய்த அமெரிக்கர்களுக்கு நாம் மரியாதை செய்யாவிட்டாலும் ,அவதூறு பேசாமலாவது இருக்கலாமே!!!//
    நான் அப்படி எங்கும் அவதூறாக பேசவில்லை ஜி! :) :) அதற்காக அமெரிக்கர்கள் மட்டுமே சத்திய சீலர்கள் என்பது போல புகழ்ந்து தள்ளி மற்றவர்களை ஒரேடியாக தாழ்த்தாதீர்கள்!

    நீங்கள் சொன்ன வார்த்தைகளை உங்களுக்கே நினைவுறுத்துகிறேன்:
    //ஒரு கண்ணில் வெண்ணை.மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற உங்கள் வாதத்தில் மிக பெரிய "ஓசோன்"ஓட்டை இருக்கிறது.//
  • மை டியர் மானிடர்களே.!!!
    மேற்கண்ட விவாதங்களிலிருந்து அடியேனுக்கு புலப்படும் நீதிகள் பின்வருமாறு;
    1. நம்மில் (இந்தியரில்)பலருக்கு ஐரோப்பியர்கள் மீது குறிப்பாக மேற்கு ஐரோப்பியர்கள் மீது அதிலும் குறிப்பாக அமெரிக்க வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பும்,துவேசமும் இருக்கிறது!!.
    2.ஐரோப்பிய மைய வாதத்துக்கு போட்டியாக இந்திய மையவாதம் என்ற பித்துக்குளித்தனம் சமீப காலமாக அதிகரித்துவருகிறது.இவை இரண்டையும் அடியேன் ஏற்கவில்லை.!!
    3.ஜாதி,இனம்,குலம் தொடர்பான இந்தியர்களின் புராதன கோட்பாடுகள் ஐரோப்பியர்களின் ஹாமிட்டிக் கோட்பாட்டால் நசுக்கப்பட்டு மதிப்பு இழந்து விட்டது.நமது வெள்ளை இன துவேசத்திற்கு இதுவும் ஒரு காரணமோ ,என்னமோ?ஹிஹி!!
    Delete
  • மை டியர் சாத்தான் அவர்களே!!!

    எதைப் பற்றியோ வாதம் செய்ய ஆரம்பித்து, நண்பர்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு எதிர் வாதத்திற்கும் நேரடி பதில் சொல்லாமல் இந்த விவாதத்தை திசைதிருப்பும் முயற்சியிலேயே நீங்கள் முனைப்பாக இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது!!! இதன் நடுவில் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் கோட்பாடுகள் அனைத்தையும் எங்கள் தலையில் வேறு கட்டப் பார்க்கிறீர்கள்! நல்லது! :)

    //நமது நண்பர்கள் பலர் வெள்ளையர்களை கடுமையாக சாடியிருக்கிறார்கள்// &
    //குறிப்பாக அமெரிக்க வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பும்,துவேசமும் இருக்கிறது!!.//
    என்னைப் பொறுத்தவரை, நான் ஒன்றும் வெள்ளையர்களை சாடவில்லை; அமெரிக்க துவேஷமும் காட்டவில்லை! ஆனால், வெள்ளையர்கள் (ஐரோப்பியர்கள் & அவர்கள் வழி வந்த அமெரிக்கர்கள்) ஒன்றும் வன்முறை விரும்பாத அஹிம்சாவாதிகளோ, படுகொலை புரியாத புனிதர்களோ, அடக்குமுறை / அடிமைமுறை கட்டவிழ்க்காத அம்மாஞ்சிகளோ அல்ல என்பதை மட்டுமே சில பல உதாரணங்களுடன் விளக்கி உள்ளேன்!!!

    மேற்கண்ட விவாதங்களிலிருந்து எனக்கு புலப்படும் நீதி ஒன்றே ஒன்றுதான்:
    செவ்விந்தியர்களின் வன்முறை குறித்து எவ்வித தயக்கமும் இல்லாமல் அங்கலாய்க்கும் நீங்கள், வெள்ளையர்கள் கட்டவிழ்த்த வன்முறையைப் பற்றி ஆதாரத்துடன் பேசினால் மட்டும் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கிறீர்கள்! அதை வெளிக்காட்ட முடிந்திடாமல் ஐரோப்பிய மையவாதம், இந்திய பக்கவாதம், பித்துக்குளித்தனம் என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டே போகிறீர்கள்! :D

    எங்கெங்கோ அலைபாயும் இந்த விவாதத்தை(?!) இதற்கு மேலும் தொடர்ந்திட எனக்கு துளியும் விருப்பமில்லை! இதை நான் இரண்டாவது தடவை ஆனால் உறுதியாக இறுதியாக சொல்கிறேன்! :) :)

    சரி விடுங்கள் நண்பரே! :) உங்கள் ஊருக்கு நவஜோ நாயகர் வந்து சேர்ந்துவிட்டாரா?! :)
  • டியர் கார்த்திக்.!!!
    அவர் வந்திருந்தால் நம்மால் இவ்வளவு "கருத்து குவியல்"களை போட்டிருக்க முடியுமா?!!ஹிஹி!!!
    Delete
  • அடியேனுக்கும்,அருமை நண்பர் கார்த்திக் அவர்களுக்கும் நடைபெற்ற கருத்து விவாதத்தில் பங்கேற்று பதிவிட்ட நண்பர்கள் திருவாளர்கள்.cap tiger,ஸ்டீல் க்ளா ,சிவ.சரவணகுமார்,ஆடிட்டர் ராஜா ஆகியோருக்கு எனது "ஸ்பெஷல்" நன்றிகள்.!!
    விவாதத்தில் பங்கு கொள்ளாமல் "சும்மாங்காச்சி" வந்து போன நண்பர்கள் திருவாளர்கள்,ஈரோடு விஜய்,tex kit ,வ.வே.கிருஷ்ணா,மற்றும் காமிக் லவ்வர் ராகவன் ஆகியோருக்கு எனது "சாதா"நன்றிகள்!!!
    இறுதியாக ஒரு கேள்வி?.........பயந்து விடாதீர்கள்.இது காமிக் லவ்வர் ராகவனுக்கு.!!
    மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்கை சுஜாதா அவர்கள் உங்களிடமாவது சொன்னாரா?ஹிஹி!!!
    Delete
  • நண்பர் மீரான் அவர்களின் முத்தான கருத்தை விட்டு விட்டீர்களே சாத்தான் ஜி! :) அப்படியே அவருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி சொல்லி விடுங்கள்! 'சபாஷ், சரியான போட்டி' என்ற ரீதியில், வில்லத்தனமாக உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்த விஜய் அவர்களுக்கு சாதா நன்றி கூட சொல்ல வேண்டாம்! ;) வேண்டுமானால் சாத்தி சாத்தி நன்றி சொல்லுங்கள்! :D

    //Meeraan 22 January 2013 01:20:00 GMT+05:30
    சிகப்பிந்தியர்கள் கப்பல் ஏறி ஐரோப்பா போய் வெள்ளையர்களின் மண்டைத்தொலி உரித்தார்களா?! அல்லது தன் வீட்டுக்குள் வந்து அதிகாரம் செய்தவனின் மண்டைத்தொலி உரித்தார்களா?
    வெள்ளையர்கள் தந்தியை கண்டுபிடிக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புகை மூலம் செய்தி பரிமாறிகொண்ட நாகரிகம் தெரிந்தவர்கள் சிகப்பிந்தியர்கள் அல்லவா !?
    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்தை போன்றது சிகபிந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்பது.//
  • ஏன் ஏன் ஏன் கார்த்திக்?

    காலையில் ஒரு நன்றி ஓசியில் கிடைச்ச சந்தோஷத்திலிருந்தேன். இப்படி அநியாயமா கெடுக்கறீங்களே?!

    உசுப்பேற்றுவதும் ஒரு வகையில் உற்சாகப் படுத்துவது மாதிரிதானே! பந்தயத்தில் ஓடும் குதிரையிடம் 'கமான், கமான்' என்று சொல்வது மாதிரி! :)
  • நான் காலேஜ் முதலாண்டு படிக்கும் பொது ஒரு முறை ஸ்ரீரங்கம் பெருமாள் சேவிக்க வந்தவரை நான் தடுத்து நிறுத்தி மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்லுங்கள் என்று கேட்க அவர் சற்று தடுமாறி "இன்னும் கொஞ்சம் வயசாகட்டும் சொல்றேன்" என்றார். அதன் பிறகு நானும் மறந்து அவரும் மறந்து விட்டார் - எனக்கு சொல்ல. பிந்தைய சந்திப்புக்களில் கம்ப்யூட்டர், ஏலேக்ட்ரோனிக்ஸ், telecom போன்ற படிப்பு சம்மந்தமாகவும் அல்லது "அந்த படம் எப்படி வருது? இந்த ஹீரோ எப்படி நடிப்பார்?" என்று ஜல்லியடித்து ஜல்லியடித்து உருப்படியாக எதுவும் கேட்காமல் விட்டு விட்டேன். கொஞ்சம் லேசு பாசா career guidance கேட்டதோடு சரி.

    பிறகு ஒரு முறை அரசு பதில்களிலோ எதிலோ படித்த ஞாபகம். அப்போது சிரிப்பு வரவில்லை. அவரிடம் கேட்காமல் விட்டோமே என்ற நினைவு வந்தது!
  • நன்றி ராகவன்ஜி!!!
    மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் தெரிந்த நண்பர்கள் தயவு கூர்ந்து சிரமம் பார்க்காமல் அடியேனின் கீழ்க்கண்ட முகவரிக்கு மெயில் செய்யவும்.
    somasu1973@gmail.com
    தயவு செய்து தமிழில் அனுப்பவும்.ஹிஹி!!!