Monday 25 February 2013




சாத்தானுக்கு வந்த சந்தேகம் !இது பொய்யென்றால் ..............

இது மட்டும் மெய்யா........???

24 comments:

  1. அப்படிப்போடு அறுவாள , ஆரம்பமே அதிரடியால இருக்கு!

    ReplyDelete
  2. வெளியிலுள்ளவர்கள் ஆயிரம் சொல்லலாம். ஈழத்திலிருக்கும் தமிழர் யாரும் இந்த இரண்டையும் பொய் என்று சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் தங்கள் தலைவன் இல்லையென்பது.

    ஆனால், உங்களால் அவர்களுக்காக இரண்டு வார்த்தைகள் எழுதமுடியாவிட்டாலும், மூன்றுவேளை மூக்குப்பிடிக்க உண்டுவிட்டு இப்படி பதிவுகளிடுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்களுக்காக உங்களால் எப்படி இரண்டு வார்த்தைகள் எழுதமுடியவில்லையோ அதுபோலவே இப்படி கேவலப்படுத்தி, உணர்வுகளை மதிக்காமல் பதிவிடவும் உரிமையில்லை. தனக்குவந்தால்தான் தெரியும் ஒவ்வொன்றும். இன்றும் ஈழத்தில் முகாம்களுக்குள் இராணுவத்தின் காலடியில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட கூட்டம் அவர்கள்.

    அவர்களுக்காக இரக்கப்பட உங்கள் இதயங்களில் ஈரம் இல்லாவிடினும் பரவாயில்லை... மோசமாக எழுதும் பேனாக்களையாவது உடைத்துவிடுங்கள் தயவுசெய்து.

    ReplyDelete
  3. ஒரு சிறுவனின் மரணம் மட்டுமல்ல இது. ஒட்டுமொத்த ஈழத்து மக்களின் குழந்தைகளின் இறப்பின் சாட்சியம். இதுகூடப் புரியாமல்... என்னய்யா மனிதர்கள் நீங்கள்?

    ReplyDelete
    Replies
    1. டியர் bond 0212!!!
      புலி தலைவரின் மகன் கொல்லப்பட்டது 2009ஆம் ஆண்டில்.அப்போதே ஒரு புகைப்படம் வெளியானது.சிறுவர்களை சர்வதேச போர் விதிகளுக்கு புறம்பாய் தங்கள் படையில் வலுக்கட்டாயமாய் இணைத்து ,அவர்களுக்கு ஆயுத பயிற்சியும் அளித்தவர்கள் புலிகள்தான்.எனவே ,அந்த சிறுவர்கள் (புலி தலைவரின் மகன் உட்பட)கொல்லப்பட்டதற்கு இலங்கை ராணுவத்தை மட்டுமே குறை கூறிட முடியாது.
      விடுதலை புலிகளின் "போர் குற்றம்"இது!!!

      Delete
  4. அந்த குழந்தையின் முகம் மனதில் ஏற்படுத்திய சோகம் தாங்கமுடியாதது ,இன்னும் விலகவில்லை .அதில் இருந்து மீளவே விரும்புகின்றேன் .

    ReplyDelete
  5. யார் உமக்கு இப்படியெல்லாம் சொன்னது. இதோ, என் பக்கத்து அறையில் ஈழத்தின் இறுதி யுத்தத்துக்கான ஒரு சாட்சியாக நண்பன் இருக்கிறான் கால்களை இழந்தவனாய். அவனும் யுத்த காலத்தில் பதின்ம வயதினனாய் இருந்தவன்தான். அவனை எத்தப் புலியும் பூனையும் வலுவில் படையில் இணைக்கவில்லை. தன்னுடைய தாய் கண்ணெதிரிலேயே எறிகணை வீழ்ந்து சிதறியதைப் பார்த்து புலிகளோடு இணைந்து போராடப் போனவன் அவன். இறுதி யுத்தத்தில் எறிகணை அவனது இரு கால்களையும் பறித்தது. இராணுவத்திடம் சரணடைந்தான். ஆனால், யுத்த விதிகளை மட்டுமல்ல மனித, மிருக விதிகளையே மீறிய கோர சிங்கள ராணுவம், பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் 'பாதுகாப்பு வலயமாக' அறிவித்த இடத்துக்குள் பொழிந்து மக்களை கொன்றொழித்தது. சரணடைந்த இரு கால்களையும் இழந்த என் நண்பனுக்கு நடந்த சித்திரவதைகள் இங்கே எழுத இயலாதவை.

    கடந்த வாரம் அவனுக்கு பதினோராவது ஆபரேஷன் செய்யப்பட்டது. அவனது பிறப்புறுப்பினுள் சிங்கள இராணுவம் இரகசிய சிறையில் வைத்து செலுத்திய இரும்புக் குண்டுகள் இரண்டு அகற்றப்பட்டன. இதற்குமேலும் அந்தக் கொடுமைக்கு சாட்சியம் வேண்டுமா? புலிகள் என்ன, பக்கத்து நாட்டை கைப்பற்றவா அல்லது கொள்ளையடிக்கவா போராடினார்கள்? தங்கள் மக்களின் விடுதலைக்காய்ப் போராடினார்கள். மக்கள் தாங்களாகவே போராட்டத்தில் இணைத்துக்கொண்டதுதான் வரலாறு. வீட்டிற்கு ஒரோ ஒரு பிள்ளை என்பதாற்காய் தாங்களாகவே இணைந்த பிள்ளைகளை திருப்பி வீட்டிற்கு அனுப்பிவைத்ததும், நன்றாகப் படித்தவர்களை தொடர்ந்து கல்வி கற்க அனுப்பிவைத்ததும் அந்த வீரத் தலைவனின் போற்றற்கரிய குணங்கள். பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு போராட்டத்திலிருந்து பிரிந்துபோன கருணாக்களின் கபட நாடகப் பிரசாரத்தில் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டால்... அதை உண்மை என்று நம்பிக்கிடக்கும் உங்கள் உடல்களில் ஓடுவது தமிழ் இரத்தமா? என்ற சந்தேகம் எழுகிறது.

    முத்துக்குமார் போன்ற உணர்வாளர்களின் எண்ணங்களை கொச்சைப்படுத்தும் உங்களைப்போன்றவர்கள் இருக்கும்வரை தமிழுக்கும் உய்வில்லை. தமிழனுக்கும் உய்வில்லை. முதலில் தமிழ் நாட்டில் நடக்கும் கேவலங்களை பதிவிடுங்கள். சமூக அவலங்களை எழுதுங்கள். அண்டை நாட்டு சொந்தங்களுக்கு உதவிட மனம் இல்லாவிட்டாலும், உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமலாவது இருங்கள்.

    ReplyDelete
  6. உங்களுக்கு உண்மையிலேயே உண்மையை அறிய ஆவல் இருந்தால்... வன்னிக்கு போய்ப்பாருங்கள். தினம் தினம் இராணுவம் செய்யும் கொடுமைகளின் சாட்சிகளாய் ஊமைகளாய் அழும் உறவுகளை நேரில் பாருங்கள். அதற்குப் பிறகாவது உங்கள் மனங்களில் இரக்கம் தோன்றட்டும். விமர்சனம் எழுத இது ஒன்றும் சினிமா அல்ல. பக்கத்து தேசத்தில் பற்றி எரியும்போது, அவலக் குரல் எழும்போது என்னய்யா செய்தீர்கள்? ஒரு துளி கண்ணீராவது வந்ததா உம் கண்ணில்? பிறகென்ன...க்கு இந்தப் பதிவு?

    ReplyDelete
  7. தைரியமிருந்தால் போய்ப்பாரும் வன்னியின், யாழ்ப்பாணத்தின், மட்டக்களப்பின் தமிழர் அவலங்களை நேரில்! தைரியமிருந்தால்....

    ReplyDelete
  8. உம் வீட்டுப் பிள்ளையை பக்கத்து வீட்டுக்காரன் கத்தியால் வெட்டினால் என்ன செய்வீர்? உம் வீட்டு பெண்ணை பக்கத்து கிராமத்துக்காரன் பாலியல் வல்லுறவு செய்தால் என்ன செய்வீர்? இப்படிக் கொடுமை நடக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்த்து, பின்னர் பதிவும் இடுவீரோ?

    ReplyDelete
  9. @Bond 2012

    நண்பரே போய் பார்த்தவர்கள் கூற்றுப்படி இங்குள்ளவர்கள் இனியும் ஒரு புரட்சி வெடிக்கும் என்று வீண் முழக்கமிடும்போதெல்லாம் அங்கு அனைவரும் சீரழிக்கப்படுகிறார்கள் என்பதே நிஜம். கர்நாடகத்திலும் , கேரளத்திலும் நம் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்பதற்காகவே நாம் அடக்கி வாசிப்பதில்லையா அது போல் அட்க்கி வாசித்தால் அவர்களுக்கு நன்மை பயக்குமெனில் அமைதி காப்பது நலமல்லவா???

    ReplyDelete
    Replies
    1. bond 2012.........ரொம்ப கொந்தளிக்காதீங்க..........

      ஒரு படம் கிடைத்துவிட்டது....உடனே எல்லோரும் கொந்தளிக்கிறீர்கள்....புலிகளால் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்களின் படங்கள் கிடைக்கவில்லை ..... அவ்வள‌வுதான்........


      சிறுவர்களை வற்புறுத்தி படையில் சேர்ப்பதும் , போர்க்களத்தில் அவர்களை முன்னால் நிறுத்தி பலியிடுவதும்.புலிகளின் வழக்கமான செயல்பாடுகள்தான்........[ இதன் காரணமாகவே ஈழத்தமிழர்கள் அவர்களை பொடியன்கள் என்றே அழைப்பது வழக்கம் ]சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் , ஐ. நா. சபையும் இதுகுறித்து புலிகளை பலமுறை எச்சரித்துள்ளனர்.......


      தன்னுடைய படையில் உள்ள வீரர்களுக்கெல்லாம் , எதிரியிடம் மாட்டிக்கொண்டால் உடனே சயனைட் சாப்பிட்டு மரண‌மடையும்படி உத்தரவிட்டுவிட்டு, சண்டையில் தோற்றவுடன் தானும் தன் குடும்பமும் மட்டும் தப்பிக்க வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு சென்றவர்களை நீங்கள் வேண்டுமானால் வீராதி வீரன் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுங்கள்......எங்களையாவது அமைதியாக வாழ விடுங்கள்........

      Delete
    2. டியர் சிவ.சரவணகுமார்!!!
      சாதா புலிகளுக்கு சயனைட்.!!!லீடர் புலிகளுக்கு சரண்டர்.!!!இதுதான் இந்த மாவீரர்களது கொள்கை.

      நாங்களும்,சிங்களர்களும் சகோதரர்கள்.எங்களுக்குள் நடக்கும் பிரச்னையில் தலையிட அந்நியர்களான இந்தியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.".......
      .............இது புலி தலைவர் இருபது ஆண்டுகளுக்கு முன் அளித்த ஸ்டேட்மென்ட்.
      ...........ஆக,இலங்கையில் நடந்தது அண்ணன்-தம்பி சண்டை.இதில் நாம் தலையிட தேவையில்லை என்று இந்திய அரசு முடிவெடுத்ததில் தவறில்லை என்பதே நல்ல பிசாசின் கருத்து.இலங்கை தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை,விடுதலை புலிகளின் நலன்தான் முக்கியம் என கருதுவோரே தற்போது "போர்குற்றம்"..."மனித உரிமைமீறல்"என்றெல்லாம் பேசி தங்கள் "ஆற்றாமையை"வெளிப்படுத்தி கொள்கிறார்கள்.

      Delete
    3. மன்னிக்கணும். ஒரு படம் கிடைத்ததற்காக இங்கே யாரும் கொந்தளிக்கவில்லை. இப்படி உணர்வுகளை கேவலமாக்கி பதிவிடுவதைக்கண்டே கொந்தளிக்கிறோம். பிரபாகரன் ஒருபோதும் சரணடையவில்லை. அவரது மூத்த மகன் யுத்தத்தில் போரிட்டு உயிர் துறந்ததை புகைப்படங்களில் பார்க்கவில்லையா? இந்தப் பாலகன் யுத்தத்தில் போராளியாக இருக்கவில்லை. பிரபாகரனும் வீர மரணமே அடைந்தார். யார் காலிலும் வீழ்ந்து மடிந்துபோகவில்லை. பகத் சிங், நேதாஜி போன்றவர்களின் வழியே வாழ்ந்து மறைந்த மாவீரன் அவர். அவருடைய குடும்பம் தப்பி ஓடிவிட்டது என்று புரளி கிளப்பியவர்களுக்கு அந்த மண்ணில்தான் என் குடும்பத்தோடு வாழ்ந்து வீழ்ந்தேன் என்று தெளிவுபடுத்திய தூய மனிதர் அவர். அவரைப்பற்றி மட்டுமல்ல தமிழரின் வீர வரலாற்றைக் கறைபடிய வைக்க யாரும் முயலவேண்டாம். இன்னுமொரு போரைத் தூண்டுவதற்கு முயல்பவர்கள் தமிழக அரசியல் கேவலங்கெட்டவர்களேயொழிய நாமல்ல. நாம் கேட்பது மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்யுங்கள் என்பது மட்டுமே.

      உங்கள் சகோதரியை, அன்னையை, மகளை கொண்டுபோய் தினமும் பலர் செர்ந்து பாலியல் வன்முறை புரிவதை பார்த்து பேசாமல் இருக்கமுடியுமா உங்களால்? நீங்கள் சொல்வது போலவே புலிகளும் மக்களும் வேறு வேறு என்றால்கூட, இப்போது மக்களுக்காகவாவது உங்கள் இரத்தங்களில் சிறிதும் சலனம் இல்லையா? அது சரி இவர்களையே மறந்து மழுங்கடித்துவிட்டு சினிமாப் பேய்களை தோளில் வைத்து ஆடுபவர்கள்தானே நீங்கள்... எக்கேடோ கெட்டுப்போங்கள்...

      சிங்களத்தில் காமிக்ஸ் வருகிறதாம் போய் வாங்கி வாசியுங்கள்...

      Delete
    4. இவர்களையே மறந்து மழுங்கடித்துவிட்டு -

      https://www.google.lk/search?hl=en&q=indian%20freedom%20fighters&psj=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bvm=bv.43148975,d.bmk&biw=930&bih=576&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=FQQvUeH4G8rRrQf-pIGoBw

      Delete
    5. டியர் bond 2012!!!
      ///சினிமாப் பேய்களை தோளில் வைத்து ஆடுபவர்கள்தானே நீங்கள்... எக்கேடோ கெட்டுப்போங்கள்..///
      சினிமாக்காரர்கள் யாரும் சக சினிமாக்காரர்களை ஒழித்து கட்டுவதில்லை.நான் மட்டும் தான் நடிக்கவேண்டும்.மற்றவன் எவனும் நடிக்கக்கூடாது என்று சக நடிகர்களை அச்சுறுத்துவதில்லை.ரஜினி என்ன கமலை கொன்றுவிட்டாரா...?அமிதாப் ஷாருக் கானை அழித்துவிட்டாரா...?
      புலிகளின் கொலைவெறிக்கு கண்டனம் தெரிவிக்காமல் இலங்கையை மட்டுமே சாடுவதில் யாதொரு பயனுமில்லை.புலிகளின் ஈவிரக்கமற்ற "மனித வெடிகுண்டு"கலாசாரத்தை ஆதரித்துவிட்டு,சிங்களன் "ஷெல்லடிக்கிறான்"என ஓலமிடுவதில் ஒரு அர்த்தமுமில்லை.

      Delete
  10. விடுதலை புலிகள் கையால் கொல்லப்பட்ட தமிழீழ தலைவர்கள் அநேகர்.பட்டியலிட்டு மாளாது.யாழ் மேயராயிருந்த ஆல்பிரட் துரையப்பா-விலிருந்து நீலன் திருச்செல்வம்,லக்ஷ்மண் கதிர்காமர் வரை ஆயிரக்கணக்கான தமிழீழ தலைவர்களை கொன்று குவித்த புலி தலைவருக்கு தமிழக தமிழரின் "அனுதாபத்தையோ"..."ஆதரவையோ"பெற எந்த தகுதியும் கிடையாது.
    புலி தலைவர் சாகவில்லை.. ..உயிரோடு இருக்கிறார் என்று சொல்லி பித்தலாட்டம் செய்பவர்கள் "திராவிடத்வா".."ஈரோடு வெங்காயத்வா"...வகையறாக்களே தவிர ,ஈழ தமிழரல்ல !!!

    ReplyDelete
  11. கடைசி நேரத்தில் பிரபாகரன் சரண‌டைய [ நடேசன் மூலமாக ] செஞ்சிலுவை சங்கத்திடமும் , இந்தியாவிடமும் எப்படி மன்றாடினார் என்பதற்கு ஆதார‌ங்கள் இருக்கின்றன.......ஏற்பதும் , கண்ணை மூடிக்கொண்டு துதி பாடுவதும் உங்கள் விருப்பம்......


    பி.எல். ஒ எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்........அது ஒரு தனி இயக்கம் அல்ல...... 17 தனித்தனி இயக்கங்களின் தொகுப்பு......... பாலஸ்தீனம் என்னும் ஒரே லட்சியத்துக்காகபோராடும் வெவ்வேரு இயக்கங்களின் கூட்டமைப்பு......இவர்களோடு சேராத , மிகத்தீவிரமான '' ஹமாஸ் '' என்னும் அமைப்பும் அங்குண்டு..... இவர்கள் அனைவரும் இஸ்ரேலோடு மட்டும்தான் போரிடுவார்களே தவிர , ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதில்லை.......உங்கள் வ‌ழிமுறை உங்களுக்கு .....எங்கள் வழிமுறை எங்களுக்கு....மற்றபடி , நமது பொது எதிரி இஸ்ரேல்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்........ ஆனால் பிரபாகரன் செய்தது என்ன? சகோதர இயக்கங்களை முற்றாக ஒழித்தார்.......தன்னைதவிர வேறு தலைவர்களே ஈழத்தில் இருக்கக்கூடாது என்று நினைத்தார்......காசி , அமிர்தலிங்கம் ,போன்ற மிதவாத தலைவர்களையும் , யோகேசுவரன் ,சிறீசபாரத்தினம் . பத்மனாபா போன்ற சக போராளித்தலைவர்களையும் ஈவு ,இரக்கமின்றி படுகொலை செய்தார்......கடைசியில் இவரும் கொடூரமாகக்கொல்லப்பட்டார்.....வினை விதைத்தவன் வினையறுப்பான்........

    அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழர் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரே உருப்படியான முயற்சி ...ராஜீவ் - ஜெயவர்தனே இடையிலான இந்திய -இலங்கை ஒப்பந்தம்......அந்த நல்ல முயற்சியை தனது சுய நலத்துக்காக கெடுத்து நாசம் செய்தவர் பிரபாகரன்.......தனது தலைமையிலான சர்வாதிகார நாடாக ஈழத்தை மாற்ற நினைத்தார்.......அதற்கு உதவி செய்வதுதான் இந்தியாவின் வேலையா? மறுத்த இந்திய அமைதிப்படையை தாகினார்...இந்திய வீரர்கள் தமிழ்ப்பெண்களை கற்பழிக்கிறார்கள் என்று அவதூறு பரப்பினார்.......பிரேமதாசாவின் தோள் மீது கை போட்டுக்கொண்டு நாங்கள் சகோதரர்கள் , எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம், இந்திய நாய்கள் வெளியேற வேண்டும் என்று கொக்கரித்தார்....... பிறகு பிரேமதசாவையும் தீர்த்துக்கட்டினார்........ நல்லது செய்ய நினைத்த ராஜீவை இந்திய மண்ணிலேயே கொடூரமாக கொலை செய்தார்.......

    ஒரு குலத்தை அழிக்க ஒருவன் போதும்...காஷ்மீர பண்டிதர் குலத்தில் நேரு பிறந்ததால் அந்த இனமே அழிந்தது.....பிரபாகரன் பிறந்தததால் ஈழத்தமிழர்கள் இன்று சொல்லொனாத துயருக்கு ஆளாகிறார்கள் .....இதற்கு எங்கள் மேல் ஏன் பாய்கிறீர்கள்?

    ReplyDelete
  12. இந்திய இராணுவம் ஈழ மண்ணில் செய்த கொலைகளையும் கற்பழிப்புகளையும் சொல்லொனா கொடுமைகளையும் நினைத்துப் பார்த்தால் கண்களில் இரத்தம் வழியும். தமிழன் தன்னைக் காக்கத்தான் ஆயுதம் எடுத்தானே தவிர மற்றவனைக் கொல்ல அல்ல. ரஜீவ் காந்தி தனது பதவிக் காலம் முடியும்போது 'அடடா.. இவ்வளவு விடயம் இருக்கிறதா இலங்கையில்? எனக்கு சரியாக யாரும் சொல்லவில்லையே! அடுத்த பதவிக் காலத்தில் நான் நிச்சயம் தம்ழருக்கு சரியா தீர்வு கொடுப்பேன்'' என்று புலிகள் தரப்புக்குச் சொன்னார். ஆனால் பாவம் அவரை காசுக்க விலைபோன சந்திர சுப்பிர மணிய சுவாமிகளும், உளவு வலையில் விழுந்திரந்த சோனியாவும் , இந்தியா வல்லரசாக விரும்பா அமெரிக்க வல்லரசுமாய்க் கொன்றன. இதற்கு 3 குழுக்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழகத்தில் இடம் தெரிவுசெய்யப்பட்டது. அதற்கு கருணாநிதி குழுவும் இடம்கொடுத்து கண்டும் காணாமலும் விட்டது.

    முதல் நாள் பற்றைக் காடாய்க் கிடந்த இடம் அடுத்தநாள் பெரும்புதூர் மேடையாக்கப்பட்ட மர்மம் என்ன? மூப்பனார் தவிர காங்கிரஸ் பெரிய தலைகளெதுவும் அந்த முக்கிய கூட்டத்துக்கு நில்லாமல் ஓடி ஒளிந்ததேன்? இவ்வளவும் தெரிந்தும் சி.பி.ஐ இப்போதும் சிலும்பிக்கொள்ளாமல் நலுங்கி நிற்பதேன்? அன்று பத்திரிகையாளர் மாநாட்டில் தலைவன் வாய் திறந்து சில உண்மைகளை வெளியிட்டிருந்தால், இறுதி யுத்தத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவும் அமெரிக்காவும் நடத்தி முடித்திருக்கும். அவன் சொன்னான் 'அது ஒரு துன்பியல் சம்பவம்' என்று. இன்று இந்தியாவை ஆளும் துன்பியலுக்கு, புருசனைக் கொன்ற பாதகிக்கு என்ன தண்டனை கொடுத்தது நீதி? சிங்கள இராணுவத்துக்கு பணத்துக்கும் பகட்டுக்கும் பெண்ணுக்கும் விலைபோன துரோகிகளை தாலாட்டி சீராட்டியா வைத்திருக்கமுடியும்? இன்று மட்டக்களப்பு பெண்களை சிங்கள மந்திரிகளின் கட்டிலுக்கு அனுப்பும் மாமா வேலையைப் பார்ப்பது கருணா.

    மறுபடியும் பிரபாகரன் வரவேண்டும் என்று சிங்கள மக்களே கேட்கும் அளவுக்கு கொடுமை நடக்கிறது மகிந்தா ஆட்சியில். உங்களை எதுவும் செய்யுங்கள் புடுங்குங்கள் என்று நாம் கேட்கவில்லை. உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். அவர்கள் தங்கள் வேலையை தாங்களே பார்ப்பார்கள் என்றுதான் சொல்கிறோம். அரசியல் லாபத்துக்காக நாடகமாடும் தலைமைகளை வைத்துக்கொண்டு பாசாங்கு செய்யாதீர். முதலில் தமிழகத்தை தமிழனை ஆளச்செய்யுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. டியர் bond 2012!!!
      நீங்கள் மட்டுமல்ல!!பொதுவாக உங்களைபோன்ற புலி ஆதரவாளர்கள் அனைவருமே புலிகளை விமர்சிப்பவர்களை கடும் சொற்களால் தாக்குவதும்,அவர்கள் வீட்டு பெண்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதையும் ஒரு ஹாபியாகவே வைத்துகொண்டிருக்கிறீர்கள்.உங்கள் விமர்சனத்தில் கொஞ்சம் "கண்ணியம்"கடைபிடியுங்கள்.ஈழ தமிழனை சாகடித்தது போல்,இங்குள்ள தமிழனையும் வார்த்தைகளால் சாகடிக்காதீர்கள்.

      Delete
    2. புனித சாத்தான் அவர்களே....

      இவர்களிடம் நாகரீகமான விமர்சனத்தை எதிர்பார்க்க முடியுமா?அவர்கள் அப்படியே இருக்கட்டும்...... நாம் நாமாகவே இருப்போம்...........

      Delete
  14. //நண்பரே போய் பார்த்தவர்கள் கூற்றுப்படி இங்குள்ளவர்கள் இனியும் ஒரு புரட்சி வெடிக்கும் என்று வீண் முழக்கமிடும்போதெல்லாம் //

    அதெல்லாம் வீண் கத்தல். எஞ்சியிருக்கும் ஈழத்து உயிர்களையும் உறிஞ்சும் இந்தக் கூத்துக்கள். இன்னொரு போர் வந்தால்தான் பிழைக்கமுடியும், அரசியல் செய்யமுடியும் அதைவைத்து அனுதாப வாக்குகளை வாங்கமுடியும். ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க முடியும், சட்டசபையில் திர்மானம் நிறைவேற்றமுடியும்....

    ReplyDelete
  15. ஈழத்து வலைப்பதிவு நண்பர்கள் வந்து இந்தப் பதிவுக்கு சரியான சாட்டையடி கொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  16. இந்திய ராணுவம் தமிழ்ப்பெண்களை கற்பழித்தது , தமிழர்களை கொலை செய்தது என்பீர்கள்......சிங்களன் உதைக்கும்போதுமட்டும் இந்தியா வந்து காப்பாற்ற வேண்டுமா? வெட்கமாக இல்லை? நாங்கள் சகோதரர்கள் , எங்கள்ல் பிரச்சினையை நாங்களே பார்த்துக்கொள்வோம் ...இந்திய நாய்கள் வெளியேற வேண்டும் என்று கொக்கரித்தீர்களே.........அப்போது மட்டும் சிங்களன் இனித்தானா? நீங்கள் வேண்டும் எனும்போது ஓடிவந்து காலை நக்கவும் , வேண்டாம் என்றால் விலகி ஓடவும் , இந்தியா என்ன உங்கள் வீட்டு நாய்க்குட்டியா?

    ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்......அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்கேற்ப நடிக்கலாம்.....ஆனால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு என்பது ராஜீவ் கொலையோடு முடிவுக்கு வந்துவிட்டது......[ சொல்லப்போனால் . போராளிக்குழுக்கள் தமிழகத்தை தங்கள் தளமாக பயன்படுத்தியதை தமிழக மக்கள் விரும்பவில்லை....உண்மையிலேயே அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்திற்கு வன்முறைக்கலாச்சாரத்தை அறிமுகம் செய்தவர்கள் புலிகள்...பத்மனாபாவின் கொலைக்குப்பிறகே , புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு குறைய ஆரம்பித்துவிட்டது.......]

    எத்தனை பதிவர்களை நீங்கள் கூவி அழைத்தாலும் , என்ன ஆகாத்தியம் செய்தாலும் உண்மை நிலை இதுதான்.....

    ReplyDelete