Friday, 1 August 2014

மிட்டாய் கடையில் ஒரு பட்டிக்காட்டான்!!!



ஈரோடு புத்தக விழா இன்று வெள்ளிக்கிழமை மாலை இசைஞானி இளையராஜா அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.அவருடைய பேச்சை கேட்க லேசான தூறல் மழையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க,புத்தகவிழா அரங்கம் வெறிச்சோடியிருந்த காட்சி இசைஞானி அவர்களை கோடம்பாக்கம் கைவிட்டாலும்  தமிழக மக்கள் இன்னும் ஓரங்கட்டி ஒதுக்கவில்லை என்பதை கட்டியம் கூறியது.

நமது காமிக்ஸ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்டால் சென்ற ஆண்டு நமக்கு கிடைத்த ஸ்டாலை விட சற்றே அகலம்போல் தோன்றியது.அடியேன் ஸ்டாலில் அடிஎடுத்துவைத்தபோது நேரம் இரவு 8 மணி.ஈரோடு ஸ்டாலின் , ஈரோடு விஜய் ஆகிய காமிக்ஸ் பெருந்தலைகள் ஸ்டாலில் நின்றுகொண்டு கடலை போட்டுக்கொண்டிருந்தனர்.சிவகாசியிலிருந்து வந்திருந்த நமது லயன் ஊழியர்கள் குமார்,மற்றும் சங்கர் ராஜன் ஆகியோரிடம் அறிமுகப்படலம் முடிந்தபிறகு ஸ்டாலை நோட்டம் விட்டேன்.சென்ற ஆண்டு புத்தக விழாவில் இடம்பெற்ற புத்தகங்களின் எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு சற்று குறைவாக இருப்பதாக பட்டது. LMS -பண்டல் பிரிக்காமல் ஓரமாக (மறைவாக)வைக்கப்பட்டிருக்க கேலரிகளில் நமது காமிக்ஸ்களோடு மதியில்லா மந்திரியும்,லக்கி லூக்கும் ஆங்கிலம் பேசும் காமிக்ஸ்களும் இடம்பெற்றிருந்தன.இவற்றில் உள்ள பல கதைகள் நமது இதழ்களில் வெளியிடப்படாதவை என்பதால் நாளை LMS வெளியிட வருகை தரும் எடிட்டருக்கு நிச்சயம் நம்ம ஆட்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை சமர்ப்பிப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதோ இன்றைய தினத்தின் EXCLUSIVE புகைப்படங்கள்!











































நமது ஸ்டாலின் முதல் வாடிக்கையாளர்கள்.


நமது லயன் அலுவலக ஊழியர் சங்கர் ராஜன்.


மற்றொரு ஊழியரான குமாருடன் சங்கர் ராஜன்.



ஈரோடு ரஷ்ய சர்வாதிகாரி அண்ணன் ஸ்டாலின்.


பத்து ரூபா புக்குக்கு பத்து சதவிதம் தள்ளுபடின்னா...நூறு ரூபா புக்குக்கு நூறு சதவிதம் தள்ளுபடி தருமாறு கேட்டு சங்கர் ராஜனை கலாய்க்கும் நம்ம ரஷ்ய சர்வாதிகாரி!


குமார்,ஈரோடு விஜய்,ஈரோடு ஸ்டாலின் ஆகியோருடன் அடியேன்!

போட்டோவிற்கு போஸ் தராமல் டபாய்த்த ஈரோடு விஜயை வலுக்கட்டாயமாய் நிற்கவைத்து எடுத்த படம்.

Sunday, 20 July 2014

"பூம் பூம் படலம்...!"



"இஸ்மவேல் துஷ்ட மனுசனாயிருப்பான்.அவனுடைய கரங்கள் எல்லோருக்கு விரோதமாயும்,எல்லோருடைய கரங்களும் அவனுக்கு விரோதமாயும் இருக்கும்." 
                                                                                                                                        -   பழைய ஏற்பாடு.




இஸ்ரேல் யூதர்கள் !

பாலஸ்தீன அரேபியர்கள் !  


பாலஸ்தீன நகரமான காஸாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. "ஹமாஸ்" என்ற தீவிரவாத இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் இத்தாக்குதல் குறித்து உலகின் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் இஸ்ரேல் ராணுவம்  தொடர்ந்து காஸா நகரத்தின் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.13-நாட்களாக தொடரும் இத்தாக்குதலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இஸ்ரேலுக்கும்,பாலஸ்தீன அரேபியர்களுக்கும் இடையே நடக்கும் இம்மோதலுக்கு வழக்கம்போல இந்திய ஊடகங்கள் "மத சாயம்"பூச முயன்று வருகின்றன.பாலஸ்தீன அரேபியர்களை "அப்பாவி முஸ்லிம்"களாகவும்,அவர்களை தாக்கும் இஸ்ரேலை "யூத இனவெறி"யர்களாகவும் சித்தரிகின்றன. இந்திய முஸ்லிம்கள் மத்தியில் மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களையும் திட்டமிட்டு தூண்டி வருகின்றன.இதன் உடனடி விளைவாக "எங்கயோ போற மாராத்தா.எம்மேல வந்து ஏறாத்தா"என்பதுபோல இங்கேயுள்ள லெட்டர்பேட் முஸ்லிம் அமைப்புகள் சம்பந்தமில்லாமல் போராட்டம்,ஆர்பாட்டம்,சாலை மறியல்,இஸ்ரேல் கொடி எரிப்பு போன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.


மேற்படி "தேச பக்த"திலகங்களின் போராட்டங்களுக்கு தூபமிடும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வீற்றிருக்கும் எதிர்கட்சி கண்மணிகளும் தங்களால் முடிந்த அளவுக்கு எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றும் விதமாக இஸ்ரேலுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புகின்றன.


போதாக்குறைக்கு,காஷ்மிர் மாநிலத்தின் பிரிவினைவாத அமைப்புகளும் "இஸ்ரேல் ஆக்கிரமிப்பு"க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே இந்திய ராணுவ வீரர்களை தாக்கி வருகின்றன.பாலஸ்தீன பூர்வ குடிகளான (!) அரேபியர்களை "வந்தேறி" யூதர்கள் தாக்குவதாக கூறி ஏக அமளி துமளி செய்கின்றன.காஷ்மிர் மாநிலத்தின் பூர்வ குடிமக்களான "ராஜ்புத்களும்,சரஸ்வத்களும்,சபர்வால்களும்" அங்கேயிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஜம்மு,சண்டிகர்,டெல்லி போன்ற இந்திய நகரங்களில் (!) அகதிகளாக வாழ்ந்துவரும் நிலையில் இந்த பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளனாக சித்தரித்து குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றன. என்ன நியாயம் பாருங்கள்.


காஸா மீது சரமாரி தாக்குதல் !


அடியேனை பொறுத்தவரை இஸ்ரேலின்  இந்த தாக்குதல் நியாயம்தான் என்பேன்.பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் சர்வதேச பொது ஜன அபிப்ராயத்தை இஸ்ரேல் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.காரணம்,பாதிக்கப்படுபவர்கள் இஸ்ரேலிய மக்களே ஒழிய, போரை நிறுத்த சொல்லும் மனித நேய மாமணிகள் அல்ல.தனது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் அந்நிய தலையீட்டை இஸ்ரேல் விரும்புவதில்லை!


குண்டு வீச்சில் சிதறும் மேற்கு கரை நகரம் காஸா !



இஸ்ரேலின் அனைத்து பிரஜைகளும் ராணுவ பயிற்சி பெற்றவர்கள்.18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆணாகிலும்,பெண்ணாகிலும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆக ,அந்நாட்டின் மொத்த மக்களும் சீருடை அணியா சிப்பாய்களே. எனவே முழு அளவிலான போர் மூண்டால் வெற்றி பெறப்போவது இஸ்ரேலே!


இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி பென்னி ஹான்ட்சுடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு !


ஜெயிக்கும் அணியை ஆதரிப்பதே நம்மூர் வழக்கம்.ஆனால்,தோற்கும் அணியில் இடம்பெறுபவர் இங்கே கொழுத்த வாக்கு வங்கியாய் இருந்து தொலைப்பதால் இங்குள்ள அரசியல் கட்சிகள் பாலஸ்தீன தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன.இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தை மத மோதலாக வருணிக்கின்றன.அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்களே என அங்கலாய்க்கின்றன.ஈ.வெ.ரா&கோ,கார்ல் மார்க்ஸ் & கம்பெனி,காந்தி&நேரு வகையறா கும்பல்களிலிருந்து நம்ம ஊர் திருமா வரை ஆளுக்காள் கருத்தும்,கண்டனமும் தெரிவிக்கும் இந்த "காஸா யுத்தம்" உண்மையில் மத மோதலுமல்ல.இந்த யுத்தம் இப்போது ஆரம்பித்ததுமல்ல!


யூத இனமும்,அரேபிய இனமும் உண்மையில் சகோதர இனங்கள்.இவ்விரு இனங்களும் பைபிள் பழைய ஏற்பாடு ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள "ஆப்ரஹாம்" என்ற நாடோடி ஆட்டிடையனின் வழிதோன்றல்கள். ஆப்ரஹாம் "யாஹ்வே" என்ற தெய்வத்தின் கட்டளைப்படி அஸ்ஸிரியாவின் "உர்" என்ற நகரத்திலிருந்து வெளியேறி தனது மனைவி சாராளுடன் பாலஸ்தீனத்தில் குடியேறினான்.அங்கே எகிப்து நாட்டை சேர்ந்த ஹாகார் என்ற பெண்ணை மணந்து அவள் மூலமாக ஒரு ஆண் குழந்தையை பெற்றான்.அக்குழந்தைக்கு "இஸ்மவேல்" என்று பெயர். சிறிது காலம் கழித்து அவனது மனைவி சாராள் மற்றொரு ஆண் குழந்தையை பெற்றாள்."ஈஸாக்" என்ற பெயரையுடைய அக்குழந்தையை ஆபிரஹாமின் தெய்வமான "யாஹ்வே" ஆசிர்வதித்து அவன் சந்ததிக்கு பாலஸ்தீன தேசத்தை உடமையாக்கினார்.ஆபிரஹாமின் மூத்த மகனான இஸ்மவேலை பாலஸ்தீன தேசத்தை விட்டு வெளியேற்றினார்!


ஆபிரஹாமின் இளைய மகன் "ஈஸாக்கின்" வம்சத்தில் வந்தவர்களே  இஸ்ரவேலர் எனப்படும் யூத இனத்தவர். ஆபிரஹாமின் மூத்த மகனும்,பாலஸ்தீனத்திலிருந்து (கடவுளால்) விரட்டப்பட்டவனுமான "இஸ்மவேல்" என்பவனது வம்சத்தில் பிறந்தவர்களே அரேபிய இன மக்கள்.இவ்விரு இனத்தவருக்கும் இடையிலான "இனப்பகை"க்கு காரணம் பாலஸ்தீன மண்.அதற்கு சொந்தம் கொண்டாடியே தங்களுக்குள் அடித்து கொள்கிறார்கள்.இவ்விரு இனங்களும் தோன்றிய காலத்திலேயே இவர்களுக்கிடையிலான யுத்தமும் தோன்றிவிட்டது!


பழைய ஏற்பாட்டின்படி ஆபிரஹாம் வாழ்ந்த காலம் கி.மு.3000!


ஆம், யூதர்களுக்கும்,அரேபியர்களுக்கும் நடந்துவரும் இந்த யுத்தத்தின்   வயது ......

"5000...!"


Sunday, 8 June 2014

சென்ஸார் நகரம் சிவகாசி !!!

சமீபத்தில் வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ் லார்கோ விஞ்ச் த்ரில்லரான "வேட்டை நகரம் வெனிஸ்" வழக்கம்போல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கதையில் லார்கோவின் ஆக்ஸன் குறைவு , ஆள்கடத்தல் மூலமாக காசு பறிக்கும் அரதபழசான கதைக்களம் , லார்கோவின் நண்பர் சைமன் இடம்பெறாதது ,மோசமான அச்சுத்தரம் என கதையில் சில மைனஸ் பாய்ண்டுகள் இருந்தும் கதாசிரியர் வான்-ஹாமேயின் அசாத்திய பரபரப்பு&விறுவிறுப்பு -டன் கூடிய இந்த த்ரில்லர் அனைவரையும் கவரவே செய்தது.

வேட்டை நகரம் வெனிஸ் & கொலையும் செய்வார் கோமான் கதைகளில் நம்ம ஊரு கலாசாரத்தை கருத்தில் கொண்டு ஏராளமான எடிட் மற்றும் மார்பிங் செய்யப்பட்டுள்ளது.லார்கோவின் தோழிகளின் முன்னழகும்,பின்னழகும் "நேர்த்தி" என்று கொஞ்சமும் இல்லாமல் அநியாயமாக (!)  மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடை அணிவிப்பு அட்டகாசங்களால்  ஈரோடு விஜய் போன்ற ஏராளமான வாலிப வயோதிக அன்பர்கள் கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அவர்களின் துயர் துடைக்க அக்கதைகளின் "எடிட்" செய்யப்படாத காட்சிகளை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.இந்த படங்கள் மேற்படி கதைகளின் ஒரிஜினல் டிஜிட்டல் பைல்களிலிருந்து இணையத்தின் ஏதோ ஒரு டாட்.காமிலிருந்து சுடப்பட்டது.

                                                                     


ஏதோ அடியேனால் முடிந்த சமூகசேவை.ஹிஹி!!!



Thursday, 15 May 2014

UNITED STATES OF "அம்மா"RICA !!!



யு.எஸ்.ஸை  "கழகங்கள்" ஆண்டால்....?

                            குலைநடுங்க வைக்கும்
                            ஒரு குரூர கற்பனை!
   
                                  

உலகின் மிகப்பெரிய பணக்கார திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்டது. வட இந்தியர், தென் இந்தியர், கிழக்கு இந்தியர், மேற்கு இந்தியர், வட கிழக்கு இந்தியர், தென் கிழக்கு இந்தியர், வட மேற்கு இந்தியர், தென் மேற்கு இந்தியர் என்று எட்டுதிக்கு இந்தியர்களும் மானாவாரியாக வரிசையில் நின்று மாங்கு மாங்கென்று வாக்களித்துவிட்டு தேர்தல் முடிவை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் "கோச்சடையான்" எப்ப ரிலீஸ் என்ற கவலையில் ஆழ்ந்துவிட்டார்கள். கழகங்கள் கோலோச்சும் புண்ணிய பூமியான தமிழகத்தில் வரலாறு காணாத "பண மழை"யுடன் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு கழக பேச்சாளர்களும் "லேடியா...? டாடியா...?"பாணியில் "மோதி"க்கொண்டு காதில் செந்தமிழை பாய்ச்சினார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக-பேச்சாளர் ஒருவர் "எங்கள் தலைவி இந்திய பிரதமர் பதவி என்ன...அமெரிக்க அதிபர் பதவிக்குக்கூட தகுதியானவர் " என்று திருவாய் மலர்ந்தருளினார். அந்த ஆசாமிக்கு அமெரிக்கா மீது அப்படியென்ன "கொலவெறி" என்றெல்லாம் புத்திசாலித்தனமாக  சிந்திக்காமல் ஒருவேளை அமெரிக்க நாட்டில் நம்ம ஊரு கழகங்கள் ஆட்சி செய்தால் எப்படியிருக்கும் என்று வழக்கம்போல பித்துக்குளித்தனமாக சிந்தித்தேன்.(நரேந்திர மோதிக்கு விஸா கொடுக்காமல் டபாய்க்கும் அமெரிக்காவை வேறெப்படி பழிவாங்குவதாம்.) லேசுபாசாக சிந்தித்ததற்கே ஏகத்திற்கு கண்ணை கட்டியது!!!


                                                                                                                                                                   

அமெரிக்க செனட் சபையில் பிரஸிடென்ட் ஜெயலலிதா நுழைய அதிமுக செனட்டர்கள் சுமார் 180 டிகிரிக்கு குனிந்து வணங்குகிறார்கள்.சீனியர் செனட்டரும், பைனான்ஸ் செகரெட்டரியுமான பன்னீர் செல்வம் பிரஸிடென்டின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து எழுகிறார்!!!

                                                                                                                                                                   



 ஸ்பீக்கர் தனபால் :   "இன்றைய தினம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்க கண்டமே உவகை கொள்ளும் வகையில் புரட்சி தலைவி பிரஸிடெண்ட் அம்மா அவர்கள் பெடரல் செனட் சபைக்கு உரையாற்ற எழுந்தருளியுள்ளார்கள்.பிரஸிடெண்ட் அம்மா அவர்களை "வருக வருக" என வரவேற்பதில் அமெரிக்கன் என்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்".


செனட்டர் பன்னீர் செல்வம்  :    "புரட்சி தலைவி பிரஸிடெண்ட் அம்மா அவர்களின் உலகம் போற்றும் நல்லாட்சியில் அமெரிக்கா பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. கடந்த ஓராண்டு ஆட்சியில் இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு 0.0012 சதவிதம் உயர்ந்திருக்கிறது. இதே ரீதியில் நாடு பயணிக்குமானால் அடுத்த 4000வருடங்களில் உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடாகிவிடும்".

        
செனட்டர் தம்பிதுரை  :    "புரட்சி தலைவி பிரஸிடெண்ட் அம்மாவிற்கு முன் அமெரிக்காவை ஆண்ட கனெக்டர் கருணாநிதியின் உலகமகா ஊழல் ஆட்சியில் ஏழை, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட அமெரிக்கர்கள் சொல்லொனா துன்பத்திற்கு ஆளானார்கள். அதனால்தான் சென்ற தேர்தலில் "முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்" என்ற முதுமொழிக்கேற்ப அமெரிக்க வாக்காள பெருங்குடி மக்கள் கனெக்டர் கருணாநிதியை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு புரட்சி தலைவி அம்மா அவர்களை பிரஸிடெண்ட் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்க்கிறார்கள்".



பிரஸிடென்ட் ஜெயலலிதா :    "நம்மையெல்லாம் வாழவைக்கும் பொன்மன செம்மல் இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் ரொனால்ட் ரீகனின் வியர்வையின் வியர்வையான என் உயிரினும் மேலான அன்பு மறுபிறப்புகளே !  உங்கள் அன்பு சகோதரியான நான் அமெரிக்காவின் அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நாடு முழுவதும் " அம்மா வங்கிகள், அம்மா விமான நிலையங்கள், அம்மா ஷாப்பிங் மால்கள், அம்மா சலூன்கள், அம்மா ஹோட்டல்கள்" ஆகியவற்றை ஏழை மக்களின் நலன் கருதி திறந்திருக்கிறேன். இந்த அரசு ஒரு மதசார்பற்ற அரசு என்பதை நிலைநாட்டும் வகையில் வருங்காலத்தில் " அம்மா சர்ச்கள்,  அம்மா மசூதிகள், அம்மா ஷைனகோஹ்குகள், அம்மா குருத்வாராக்களை" கட்டுவேன் என்ற தகவலை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்". ( பலத்த கைத்தட்டல் )


கனெக்டர் கருணாநிதி :    "இளிச்சவாய அமெரிக்கன் ஏமாந்த நேரத்தில் தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஆட்சியை பிடித்த அம்மையார் , ஏதோ உலக சாதனை செய்துவிட்டதைபோல் தாம்தூம் என்று குதிக்கிறார். ஆட்சிக்கு வந்த மறுநாளே சாமானிய  அமெரிக்கன் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வெறியாட்டம் போட்டார். பெரும் கட்டண உயர்வினால் ஏழை அமெரிக்கன் ஹெலிகாப்டரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே , மெர்ஸிடிஸ் பென்ஸில் பயணிக்கும் அவலநிலையை கண்டபோது, இந்த ஏமாளி அமெரிக்கனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று நினைக்க தோன்றியது. இந்த பாழாய்ப்போன அமெரிக்கன் சுயமரியாதை துளியும் இல்லாதவனாக, பீட்ஸாவால் அடித்த பிண்டமாக இருக்கிறானே என்று எண்ணும்போது , எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கிய பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி தந்தை ரூஸ்வெல்ட் இன்று உயிருடன் இல்லையே என்று வருந்துகிறேன்".


செனட்டர் தம்பிதுரை :   "டெக்ஸாஸில் இருந்து திருட்டு ரயிலேறி வாஷிங்டன் வந்திறங்கிய கருணாநிதி இன்று உலகின் பெரும் பணக்காரர். அமெரிக்கர்களிடம் உள்ள மொத்த பணத்தில் பாதி கருணாநிதி குடும்பத்திடம் இருக்கிறது. யு.எஸ்.ஸில் உள்ள ஹெலிகாப்டர் கம்பெனிகள் அனைத்தும் கருணாநிதிக்கு சொந்தம். ஹெலிகாப்டர் கட்டணம் உயர்த்தப்பட்டதே கருணாநிதியின் ஆட்சியில்தான். ஏழை அமெரிக்கன் அதிக கட்டண சுமையால் பாதிக்கப்படக்கூடாதே என்ற உயர்ந்த நோக்கில், பிரஸிடென்ட் அம்மா அவர்கள் அனைத்து ஏழைகளுக்கும் விலையில்லா ஹெலிகாப்டர் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்".  ( அவையில் பலத்த கரகோஷம் )


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "புரட்சி தலைவர் பொன்மனசெம்மல் இதயதெய்வம் டாக்டர் ரொனால்ட் ரீகனால் "மக்கள் விரோதி" என அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஒன்றா...இரண்டா...? சொல்லி மாளாது. மிஸிஸிபி ஆற்றில் மீன் வளர்த்ததில் ஊழல், அட்லாண்டிக் கடலை ஆழப்படுத்தியதில் ஊழல், பஸிபிக் பெருங்கடலை தூர்வாரியதில் ஊழல்....என்று ஊழலின் உறைவிடமாக விளங்கியவர் கருணாநிதி. குவாண்டனமோ சிறையில் களி திங்கவேண்டிய கருணாநிதி, ஓட்டுக்கு 1000 டாலர் லஞ்சம் கொடுத்து தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்று, செனட்டர் என்ற போர்வையில் அமெரிக்க மக்களை என் ஆட்சிக்கு எதிராக திசைதிருப்ப கோயபல்ஸ் பாணியில் உளறி கொட்டுகிறார்".



செனட்டர் விஜயகாந்த் :   "இவங்க ஆட்சி மேல அவங்களும், அவங்க ஆட்சி மேல இவங்களும் மாத்தி மாத்தி குற்றஞ்சாட்டிகிட்டே பொழுது போக்கிட்டிருக்காங்க. ஏழை அமெரிக்கனுங்க குடிக்க விஸ்கி இல்லாம சாவறாங்க. நாடு பூரா ஒரே கரண்ட் கட்டு. அமெரிக்காவுல எறங்க வேண்டிய ஏரோபிளேனுங்க இருட்டுல வழி தெரியாம மெக்ஸிக்கோவுல எறங்குதுங்க. டேய்....எவண்டா குறுக்கால பேசறது...? பேத்துருவேன்". 


செனட்டர் வைகோ :   "அன்றொரு நாள் அரிஸோனா மாநிலத்திலே, டூம்ஸ்டோன் நகரத்திலே, O.K.பண்ணையிலே, சீறிவந்த தோட்டாக்களை எதிர்கொண்டு மின்னல் வேகத்தில் துப்பாக்கியை உருவி பகைவர்களை சுட்டு வீழ்த்தினானே....வயார்ட் ஏர்ப்....அவனை போன்ற மாவீரர்களை உறுப்பினர்களாக கொண்ட கழகம்தான் மதிமுக".


செனட்டர் ராமதாஸ் :   "பாட்டாளி அமெரிக்கனுக்கு 10 சதவித இடஒதுக்கீடு தரவில்லையென்றால் அமெரிக்காவில் ஒரு மரம்கூட இருக்காது. செனட்டர் காடுவெட்டியார் தலைமையில் பாட்டாளி அமெரிக்கர்கள் போர்கோலம் பூண்டு கோடாரியுடன் கிளம்பவேண்டிய சூழலை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள்".

செனட்டர் திருமாவளவன் :   தலித் அமெரிக்கனுக்கு 15 சதவித இடஒதுக்கீடு வேணும். சட்ட மேதை அண்ணல் ஆபிரஹாம் லிங்கன் கனவு கண்ட சமூகநீதி அப்பதான் உருவாகும்.


கனெக்டர் கருணாநிதி :   "கழக ஆட்சியிலே பிற்படுத்தப்பட்ட அமெரிக்கனுக்கு 50 சதவிதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட அமெரிக்கனுக்கு 50 சதவிதம், தாழ்த்தப்பட்ட அமெரிக்கனுக்கு 50 சதவிதம், ஆதி அமெரிக்கனுக்கு 50 சதவிதம், இஸ்லாமிய சகோதர அமெரிக்கனுக்கு 50 சதவிதம் இடஒதுக்கீடு வழங்கியதை எண்ணிப்பார்த்திட வேண்டும். நேற்றுகூட என் கனவில் தந்தை ரூஸ்வெல்ட்டும், பேரறிஞர் அண்ணன் கென்னடியும் தோன்றி "கௌ-பாய் அமெரிக்கனுக்கு 50 சதவித இடஒதுக்கீட்டை ஏன் வழங்கவில்லை" என்று செல்லமாக என்னை கடிந்து கொண்டார்கள். இப்படியெல்லாம் சமூகநீதியை நிலைநாட்டியும்கூட, பாலஸ்தீன பள்ளத்தாக்கிலிருந்து வந்த வந்தேறிகள் சூழ்ச்சி செய்து ஆட்சியை அபகரித்துக்கொண்டார்கள்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதியின் முந்தைய ஆட்சிகாலத்தில் அமெரிக்க பொருளாதாரமே சீரழிந்து கிடந்தது. ஏழை அமெரிக்கர்கள் குளிர்காய டாலர் நோட்டை பயன்படுத்தும் அளவிற்கு டாலர் நோட்டு செல்லாக்காசாக கிடந்தது. எனது தலைமையிலான அதிமுக அரசு அமைந்தபின் நான் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக இன்றைய தினம் டாய்லெட் பேப்பராக உபயோகப்படும் அளவிற்கு டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது".


கனெக்டர் கருணாநிதி :   "அமெரிக்காவை ஏகாதிபத்திய இந்தியாவின் அடிமை நாடாக மாற்றிவிட்டார் அம்மையார்.ஏழை அமெரிக்கனின் தாகம் தீர்க்கும் பெப்ஸி, கோக் போன்ற உள்நாட்டு குளிர்பானங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்து, பொவன்டோ, லவ்-ஓ போன்ற இந்திய குளிர்பானங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. நியூ யார்க் என்ன செய்யவேண்டும் என்று நியூ டெல்லி ஆணையிடுகிறது. இந்தியா, பங்களா தேஸ், ஸ்ரீ லங்கா போன்ற ஏகாதிபத்திய, பணக்கார, வல்லரசு நாடுகளின்  கைப்பாவையாக அமெரிக்காவை அம்மையார் மாற்றிவிட்டார். போதாக்குறைக்கு அலபாமாவிலே பார்பர் ஷாப்பை இடித்துவிட்டு  ரோமன் சர்ச் கட்டுவோம் என்று கூச்சலிடும் மதவாத சக்திகளுடன் ரகசிய கூட்டு வைத்திருக்கிறார்".


செனட்டர் பன்னீர் செல்வம்  :   "ஆங்கில மொழியின் நம்பர் ஒன் எதிரியே முன்னாள் பிரஸிடென்ட் கருணாநிதிதான். ஆங்கில அன்னைக்கு மணிமண்டபம் கட்டியவர் பிரஸிடென்ட் அம்மா அவர்கள். அமெரிக்க குழந்தைகள் தாய்மொழியாம் ஆங்கிலத்தில் படிக்க சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தியவர் அம்மா அவர்கள். ஆங்கில செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஊழல் செய்தவர் கருணாநிதி".



கனெக்டர் கருணாநிதி :   "ஆங்கில புலவன் அய்யன் ஷேக்ஸ்பியருக்கு சிலை வைத்தவனே நான்தான். பதிமூன்று வயதில் நியூ மெக்ஸிகோவிலே ஸ்பானிஸ் மொழி திணிப்பை எதிர்த்து போராடி சிறை சென்றவன் நான். ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும், தபால் நிலையங்களிலும் எழுதப்பட்டிருந்த ஸ்பானிஸ் எழுத்துக்களை கரி பூசி அழித்தவன் நான். மொழிப்போராட்டத்தில் கலந்துகொண்டு  தங்கள் இன்னுயிரை ஈந்திட்ட இளைஞர்களுக்கு கல்லறையை கட்டியவன் நான். அன்னை ஆங்கிலத்தை காத்திட அண்ணன் கென்னடியோடு இணைந்து நாடு முழுவதும் அறவழியில் வன்முறையில் ஈடுபட்டவன் நான். அப்படிப்பட்ட என்னை ஆங்கில விரோதி என்று சொல்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதியும்,அவரது வாரிசுகளும் கொள்ளையடித்து குவித்துள்ள சொத்துக்களை கைப்பற்றினால் இந்தியாவைவிட அமெரிக்கா பணக்கார நாடாகிவிடும். ஹாலிவுட் படங்களுக்கு கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த கருணாநிதிக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது...?"


கனெக்டர் கருணாநிதி :   "மாதம் ஒரு டாலர் மட்டும் சம்பளம் வாங்கிய அம்மையாருக்கு பல பில்லியன் சொத்துக்கள் எப்படி வந்தது என்று கேட்டு பதிலுக்கு பதில் லாவணி பாடி, அந்த பிரச்னைக்குள் புக நான் விரும்பவில்லை. நான் சற்றொப்ப 75 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன். "அட்லாண்டிக் சமுத்திரத்தில் அழகிகளோடு சல்லாபி என்றாலும், அமெரிக்காவின் பிரஸிடென்ட் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக கருதுபவன் என் தம்பி கருணாநிதி" என்று பேரறிஞர் அண்ணன் கென்னடி அறுபது ஆண்டுகளுக்கு முன் அலாஸ்கா கழக மாநாட்டிலே குறிப்பிட்டதை அம்மையார் அறிந்திடவில்லை என்று நினைக்கும்போது அரசியல் இப்படி ஆகிவிட்டதே என்று உள்ளபடியே வேதனைப்படுகிறேன்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து தொடர்ந்து கொட்டப்படும் நீரால் அட்லாண்டிக் கடலின் நீர்மட்டம் உயர்ந்து அமெரிக்காவே முழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதற்கு கருணாநிதி ஆட்சிகால குளறுபடிகள்தான் காரணம். கனடா நாடு எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் நயாகராவில் விடட்டும் என்று எழுதிக்கொடுத்து அமெரிக்காவிற்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டார் கருணாநிதி".


கனெக்டர் கருணாநிதி :   "நயாகரா நீர்வீழ்ச்சியை இழுத்து மூடவேண்டும் என்று முந்தைய கழக ஆட்சியில் செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றியதே நான்தான். அப்போது அம்மையார் கொலராடோ மாளிகையில் குப்புறப்படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார் என்பதை மறந்துவிட கூடாது. நயாகரா விவகாரத்தை குறித்து கனடா பிரதமருக்கு இதுவரை மூவாயிரம் மிஸ்டு கால்களை விட்டிருக்கிறேன். அம்மையாரோ, ஒரு மெஸேஜ் கூட அனுப்பியதில்லை".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதி ஆட்சியில் அமெரிக்க மீனவர்களை கியூபா கடற்படை சுட்டுக்கொன்று வெறியாட்டம் போட்டது. கடலுக்கு மீன் பிடிக்கப்போக அஞ்சி கரையோரத்தில் கருவாடு காயவைத்து பிழைக்க வேண்டிய அவலநிலைக்கு அமெரிக்க மீனவர்கள் ஆளானார்கள்".


கனெக்டர் கருணாநிதி :   "அமெரிக்க மீனவர்கள் பேராசையுடன் அதிக மீன்களை பிடிக்க ஆசைப்பட்டு  எல்லை தாண்டி கியூபா கடலில் மீன் பிடித்ததே அதற்கு காரணம். அப்போது கூட மீனவர்களை சுட்டுக்கொல்ல வேண்டாம், உருட்டுக்கட்டையால் அடித்தால் போதும் என்று மனிதாபிமானத்தோடு கோரிக்கை வைத்தேன். அருமை நண்பர் காஸ்ட்ரோவும் ஆகட்டும் பார்க்கலாம் என்றார்". 


செனட்டர் விஜயகாந்த் :   "கவுண்டி ஷெரிப் பதவிக்குக்கூட லாயக்கில்லாத கருணாநிதியும், ஜெயலலிதாவும் பிரஸிடென்ட் பதவியில இருக்குறதால தான் அமெரிக்காவை ஒரு பயலும் மதிக்க மாட்டேங்குறானுங்க. எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க. அமெரிக்காவ இந்தியா மாதிரி வல்லரசு ஆக்கி காட்டுறேன். டேய்....ஏன்டா கத்தறே....ஒக்கார்றா".


செனட்டர் ஸ்டாலின் :   "எங்க டாடி ஆட்சியில நாங்க செஞ்ச சாதனைங்கள இப்ப இந்த லேடி சொந்தம் கொண்டாடறாங்க. எங்க டாடி பிரஸிடென்ட் ஆனவுடனே ஏழை அமெரிக்க விவசாயிங்க வாங்குன 100 மில்லியன் கோடி டாலர் கடன வட்டியோட தள்ளுபடி பண்ணுனாரு. இந்த விவசாய கடன் தள்ளுபடியால வெறும் 1000 ஏக்கர் மட்டும் வெச்சிருந்த ஏழை விவசாயிங்க வவுத்துல எங்க டாடி வோட்கா வாத்தாரு. இந்த லேடி ஆட்சிக்கு வந்ததும் ஏழை விவசாயிங்களுக்கு எங்க டாடி குடுத்த இலவச பங்களாக்கள பறிமுதல் பண்ணிட்டாரு".

செனட்டர் ராமதாஸ் :   "அமெரிக்கா ஏழை நாடா இருக்குறதுக்கு காரணமே இந்த ரெண்டு கழகங்கள்தான். இனிமே செத்தாலும் இந்த கட்சிகளோட கூட்டணி கிடையாது".


செனட்டர் வைகோ :   "பத்தொன்பதாம் நூற்றாண்டிலே, பிரான்ஸ் தேசத்திலே, பாண்டனாய் யுத்த களத்திலே, முற்றுகையிட்ட ஆங்கிலேய படைகளை பார்த்து, " முதலில் நீங்கள் சுடுங்கள் ஆங்கில கனவான்களே!" என்று வீரமுழக்கமிட்டானே...ஆண்ட்ராச்சே பிரபு....அவனை போன்ற  தியாகிகளை பெற்றிருக்கும் பேரியக்கம்தான் மதிமுக".

பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் அமெரிக்கா முழுவதும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்கள். நள்ளிரவுக்கு மேல் பெண்கள் அரைகுறை ஆடையுடன் மதுபான விடுதிகளுக்கு செல்லமுடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டு கிடந்தது. நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்கள் நலன் கருதி 24 மணிநேரமும் செயல்படும் "மகளிர் மதுபான விடுதி"களை திறந்து எப்போது வேண்டுமானாலும் பெண்கள் குடிக்கலாம் என்ற சுதந்திர நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன்".


கனெக்டர் கருணாநிதி :    "கழக ஆட்சியில் மகளிர் நலனுக்காக "மிஸ்ஸெளரி மேரி அம்மையார் திருமண உதவி திட்டம், கலிபோர்னியா காத்தரின் கல்வி கடன் திட்டம், விஸ்கான்ஸின் விக்டோரியா விதவை மறுவாழ்வு திட்டம், மாண்டனா மார்கரெட் மகளிர் சுயஉதவி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தியதை அம்மையார் மறந்துவிட்டு பேசுகிறார். மகளிர் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபடுபவன் நான்.என் மனைவிகளே மகளிர் குலத்துதித்தவர்கள்தான். என்னை பெற்ற அன்னை அஞ்சுகமே ஒரு மகளிர் தான் என்பதை இந்த மன்றத்திலே அறிவிப்பதில் உள்ளபடியே உளமகிழ்கிறேன்".  ( திமுக செனட்டர்கள் பலத்த ஆரவாரம் )


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கடந்தகால கருணாநிதி ஆட்சியில் மின்வெட்டு பிரச்னைகளால் அமெரிக்காவே இருளில் மூழ்கி கிடந்தது. நான் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுதும் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கே உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் கருணாநிதி குடும்ப தொழிற்சாலைகளுக்கு திருட்டுத்தனமாக விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது".


கனெக்டர் கருணாநிதி :   "ஆதாரமின்றி அம்மையார் அடுக்கடுக்காக அவதூறுகளை அள்ளிவீசுகிறார். என் குடும்பத்திற்கு அதிகமாக தொழிற்சாலைகள் கிடையாது. ஒரு மில்லியன் தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டால், அதில் வெறும் பத்து லட்சம் தொழிற்சாலைகள் மட்டும்தான் என் குடும்பத்திற்கு சொந்தம்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "முந்தைய திமுக ஆட்சியில் மத்திய அரசு எந்த அதிகாரமும் இல்லாமல் செயலிழந்து கிடந்தது. மாநிலங்கள் கையில் தான் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடந்தது".


கனெக்டர் கருணாநிதி :    "மாநிலத்திலே ஸ்டேட் ஆட்சி, மத்தியிலே பெடரல் ஆட்சி என்பதே கழகத்தின் நிலைப்பாடு. பேரறிஞர் அண்ணன் கென்னடி "ஸ்டேட் வாழ்கிறது, பெடரல் தேய்கிறது " என்று குறிப்பிட்டாரே , அந்த நிலை இன்றும் மாறவில்லை என்று பார்க்கும்போது " அமெரிக்கன் என்றொரு இனமுண்டு, ஆங்கே அவனுக்கென்று ஒரு குணமுண்டு" என்று பாடிய கவிப்பேரரசர் வால்ட் விட்மனின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது".


பிரஸிடென்ட் ஜெயலலிதா :   "கடந்த திமுக ஆட்சியில் அமெரிக்கா முழுவதும் இனக்கலவரம் நடந்தது. ஏராளமான மாளிகைகள் பற்றியெறிந்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி ஏழை மக்கள் பங்களாக்களை இழந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்தார்கள். கருணாநிதியின் திறமையற்ற ஆட்சிதான் இதற்கு காரணம்".


கனெக்டர் கருணாநிதி :   "இனம் இரண்டொழிய வேறில்லை என்று சற்றொப்ப ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய அனபெல்லா மூதாட்டியின் வாக்கை ஏற்று அமெரிக்கா முழுவதும் " தந்தை ரூஸ்வெல்ட் நினைவு ஈக்குவல் டவுன்"களை கட்டியதே நான்தான். அந்த டவுன்களில் வெள்ளை அமெரிக்கன், கருப்பு அமெரிக்கன், மஞ்சள் அமெரிக்கன், ஊதா அமெரிக்கன், வெல்வெட் அமெரிக்கன், ஆரஞ்ச் அமெரிக்கன் என்று பலதரப்பட்ட இனத்தவரும் கூடி வாழ்ந்ததை கண்ணார கண்டபோது பகுத்தறிவு பகலவன் தந்தை ரூஸ்வெல்ட் கண்ட கனவு கழக ஆட்சியில் நனவானதே என்று பெருமிதப்பட்டவனே நான்தான்". 



செனட்டர் வீரமணி :   "தந்தை ரூஸ்வெல்ட் மட்டும் பிறந்திருக்காவிட்டால் ஜார்ஜ் வாஷிங்டனே எருமைமாடு தான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பார். ஆடு மேய்த்த ஏசுவே, தந்தை ரூஸ்வெல்டின் பகுத்தறிவு கருத்துக்களை படித்தபின் தான் பைபிளையே எழுதினார்".



செனட்டர் H.ராஜா :   "பைபிளை எரித்தவர் ரூஸ்வெல்ட். ஆங்கிலம் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சாடியவர் ரூஸ்வெல்ட். பரிசுத்த ஆவியை நம்புபவன் ஒரு பாவி என்று பழித்தவர் ரூஸ்வெல்ட்".  
                                       

கனெக்டர் கருணாநிதி :   "பரிசுத்த ஆவி கூடாதென்பதில்லை எங்கள் கொள்கை. பரிசுத்த ஆவி என்ற பெயரில் பாலஸ்தீனத்திலிருந்து வந்திறங்கிய வந்தேறி கூட்டம் ஒன்று மூடநம்பிக்கையை பரப்புகிறதே, அதை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை. சர்ச் வேண்டாமென்பதில்லை எங்கள் கொள்கை. சர்ச் சர்ச்சைக்குரிய இடமாகிவிடக்கூடாதே என்பதுதான் எங்கள் கொள்கை. "ஒன்றே இனம். ஒருவனே ஆவி" என்று முழங்கிய பேரறிஞர் அண்ணன் கென்னடியின் ஆருயிர் தம்பிகள் நாங்கள். " அபாச்சேயின் சிரிப்பில் அல்லாவை காண்போம் " என்பதே எங்கள் பகுத்தறிவு நிலைப்பாடு.மூதறிஞர் குல்லுகபட்டர் ஹென்றி கிஸ்ஸிஞ்சரே எங்கள் கொள்கையை பாராட்டியிருக்கிறார்".


செனட்டர் வைகோ :   "ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, அசீரியா தேசத்திலே, மாமன்னர் அஸூர்-பானி-பாலின் அரண்மனையிலே, லட்சக்கணக்கான செப்பேடுகளை ஆராய்ந்து கில்காமேஷின் கதையை தேடி கண்டுபிடித்தானே பெருங்கவிஞன் ப்டாஹ்-ஹோடெப்...அவனை போன்ற மேதைகள் நிரம்பிய கழகம்தான் மதிமுக".


செனட்டர் விஜயகாந்த் :   அமெரிக்கா பூரா சுத்தி வந்துட்டேன்.ஒரு பயகிட்டகூட நயா டாலர் இல்லை. ஒரு நாளைக்கு 8 தடவை சாப்பிட்டுவந்த அமெரிக்கன், இன்னைக்கு வெறும் 7 தடவைதான் சாப்புடுறான். அந்த அளவுக்கு உணவுபஞ்சம் தலை விரிச்சாடுது. டேய்...மரியாதையா சும்மாரு...கரண்டு கம்பத்துல கட்டிவச்சு தோல உரிச்சுருவேண்டா பரதேசி".

கனெக்டர் கருணாநிதி :   "அமெரிக்கன் என்று சொல்லடா. தலைநிமிர்ந்து நில்லடா" என்று பாடிய பாவேந்தர் பார்க்கர்ஸன்னின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். அம்மட்டோ, சூடு சொரணையில்லாதவனாக, சுயமரியாதையற்றவனாக, நடமாடும் ஸோம்பியாக இன்றைய அமெரிக்கனை பார்க்கும்போது, எப்படியிருந்த அமெரிக்கன் இப்படியாகிவிட்டானே என்று எண்ணுகையில், இந்த பாழாய்ப்போன அமெரிக்கன் செத்துத்தொலையக்கூடாதா என்று வேதனைப்படுகிறேன்".


பிரஸிடென்ட் ஜெயலலிதா : (ஆவேசத்துடன் ) "கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற 20G  அலைக்கற்றை விற்பனையில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசா 1 லட்சத்து 76 ஆயிரம் பில்லியன் டாலர் ஊழல் செய்திருக்கிறார். அமெரிக்காவே வெட்கி தலைகுனிய வைக்கும் இந்த மாபெரும் ஊழல் பற்றி கருணாநிதி நாட்டு மக்களுக்கு என்ன விளக்கம் சொல்ல போகிறார்"...?


கனெக்டர் கருணாநிதி : (திகிலுடன்) தாழ்த்தப்பட்ட ஆதி அமெரிக்க சமூகத்தில் பிறந்த இளவல் ராசா மீது உயர்குல ஏடுகள் இன ஆணவத்துடன் வக்கிரம் தோய்ந்த வார்த்தைகளை வீசி ஏசும் நிலையை காணும்போது  தந்தை ரூஸ்வெல்டும், பேரறிஞர் அண்ணன் கென்னடியும் வழிநடத்திட்ட சமூகநீதி போராட்டங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்பதை புரிந்துகொண்டு, அடிமைப்பட்டு கிடக்கும் அமெரிக்க இனம் வீறுகொண்டு எழுந்திட, பகைவர்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த பாலஸ்தீன பள்ளத்தாக்கிற்கே ஓட ஓட விரட்டியடித்திட, என் தலைமையிலும், இளவல் ஸ்டாலின் தலைமையிலும், அமெரிக்க இனமான புரபசர் தலைமையிலும் கோடிக்கணக்கான அமெரிக்க இனமக்கள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் தேதியில் ஓஹ்லஹாமாவில் நடைபெறவிருக்கிற கழகத்தின் 10-ஆவது அகில அமெரிக்க சமூகநீதி மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று முடுக்கிவிடும் பணிகள் ஏராளமாய் என் கண்முன்னே காணப்படுவதாலும், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு ஏற்ற மிகு எழுச்சியுரை ஆற்றவேண்டியிருப்பதாலும்,என்னுடைய இந்த விவாதத்தை இந்த மட்டிலே முடித்து....
" பகுத்தறிவு பகலவன் தந்தை ரூஸ்வெல்ட் வாழ்க"
" கான்ஸாஸ் தலைவன் பேரறிஞர் அண்ணன் கென்னடி வாழ்க"
" புரட்சி நடிகர் அருமை நண்பர் ரொனால்ட் ரீகன் வாழ்க"
" நடிகர் திலகம் அருமை நண்பர் மார்லன் பிராண்டோ வாழ்க"
"அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை அமெரிக்கர் உடமையடா" என்பதற்கேற்ப வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது ஆங்கிலமாக இருக்கட்டும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்"
                                                                                                                                                                                                                       ( கருணாநிதியும்,மற்ற திமுக செனட்டர்களும் "விட்டால் போதும்" என்று செனட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            முற்றும்.


கற்பனை : நல்ல பிசாசு (எ) புனித சாத்தான்.


கற்பனை ( மானசீக) உதவி :  திரு.சோ.ராமஸ்வாமி.ஆசிரியர்.துக்ளக்.


                                                              திரு.சத்யா.துணை ஆசிரியர்.துக்ளக். 


                                                  திரு.S.விஜயன்.ஆசிரியர்.லயன்&முத்து காமிக்ஸ்.

 

                                                  திரு.கிங் விஸ்வா.ஊடகவியலாளர்.சென்னை.


பின்குறிப்பு:                               


இந்த பதிவில் இடம்பெறும் உரையாடல்கள் முற்றிலும் கற்பனையாகும். இது யார் மனதையாவது புண்படுத்தியிருக்குமானால் , புண்பட்ட இடத்தை நல்ல குளிர்ந்த நீரால் கழுவி ,அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று, நல்ல அழகான மலையாள நர்ஸாக தேடிப்பிடித்து ஊசி போட்டுக்கொள்ளவும்.







Friday, 2 May 2014

ஒரு தெய்வீக கள்ள காதல்!!!



மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் பொது செயலாளரும்,ஜெர்மானிய கோயபல்ஸின் இந்திய வார்ப்புருவுமான ஸ்ரீமான் திக்விஜய் சிங்கிற்கு அறிமுகம் தேவையில்லை.அண்ணார் வாயை திறந்தாலே போதும்.அண்டப் புளுகுகளும்,அளவிலடங்கா கப்ஸாக்களும் அவர் நாபிக் கமலத்திலிருந்து அருவியாய் கொட்டும்.வாழ் நாளில் உண்மை என்பதையே பேசிடாத அவரது ஊத்த நார வாய் இப்போது ஒரு உண்மையை வேறு வழியின்றி பேசியிருக்கிறது.

திக்விஜய்க்கும்,தொலைக்காட்சி செய்தி வாசிக்கும் அம்ரிதா ராய் என்ற அம்மணியாருக்கும் தொடர்பு உள்ளதாக நீண்ட காலமாக அரசால் புரசலாக ஒரு நிருபிக்கப் படாத வதந்தி நிலவிவந்தது.அந்த வதந்தி அசல் அக்மார்க் உண்மையாகி அது சம்பந்தமான சில புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகியது.ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தை மறுத்து வந்த டிக்கி  வேறுவழியின்றி இப்போது ஒத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதுவரை பிரச்னை இல்லை.டிக்கி எந்த பெண்ணுடன் வேண்டுமானாலும் உறவு வைத்து கொள்ளட்டும்.இதனால் நம் குடி ஒன்றும் முழுகிட போவதில்லை.அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.இதில் பிறர் தலையிடுவது நாகரிகமல்ல.-என்றெல்லாம் பேசி ஒதுங்கிவிடக் கூடிய விவகாரமல்ல.நமது தேசத்தின் மோசமான கலாச்சார சீர்கேடாக நாறுகிறது நம்ம டிக்கியின் காதல்.ஏனென்கிறீர்களா...?நம்ம ஆள் டிக்கி காதலித்தது கன்னிக் கழியாத குடும்ப "குத்து"விளக்கை அல்ல.ஏற்கனவே திருமணமாகி கணவருடன் குடியும் குடித்தனமுமாயிருக்கும் ஒரு "கும்மாங் குத்து"விளக்கை!

67-வயதான டிக்கி தனது மகள் வயதுடைய அம்ரிதா ராய் என்ற NDTV -யின் முன்னாள் செய்தி வாசிப்பாளரை காதலித்துள்ளார்.அம்ரிதா ராய் (வயது43)திருமணமானவர்.இவரது கணவரின் பெயர் ஆனந்த் பிரதான்.அம்ரிதா ராயுடன் மிக நெருக்கமாக டிக்கி இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எப்படியோ வெளியே கசிந்து (அந்த அம்மணியாரே கூட வெளியிட்டிருக்கலாம்)டிக்கியின் லீலாவிநோதத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மாற்றான் மனைவியுடன் துளி வெட்கமின்றி சல்லாபித்த இந்த டிக்கிதான் இந்திய தேசத்தின் ஒப்பற்ற பெருந்தலைவரான நரேந்திர மோதியை ,அவர் தனது பால்ய விவாகத்தை மறைத்து மோசடி செய்துவிட்டதாக வானத்திற்கும்,பூமிக்குமாய் துள்ளி குதித்தவர்.அடுத்தவன் மனைவியுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டிருக்கும் இந்த கபோதிதான் "மனைவியை மதிக்காத மோதி எப்படி பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிப்பார்"என்று கொஞ்சகாலத்திற்கு முன் பேட்டியளித்தவர்.

அடியேனை பொறுத்தவரை டிக்கி புதிதாக எதையும் செய்துவிடவில்லை.அடுத்தவன் மனைவியை தன் மனைவியாக கருதும் கலாச்சாரம் நயம் காங்கிரஸ் கலாச்சாரம்.நம்ம ராகுல்,பிரியங்கா வகையறாக்களின் கொள்ளு தாத்தாவும்,ஆசிய ஜோதியும்,மனித குல மாணிக்கமுமான பண்டித் நெஹ்ருவின் அடியொற்றிய "ராவண லீலா" கலாச்சாரம்.

இதோ இணையத்தளம் ஒன்றில் பாண்டியன் என்ற அன்பர் இட்டுள்ள பின்னூட்டம் அதற்கு சான்று பகரும்.

Paandiyan on April 14, 2014 at 9:53 pm
நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார். மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப் போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”

பத்திரிக்கையாளர்களுக்கு நேரு தன் ஹோட்டலில் பேட்டி கொடுக்கிற காட்சி.
கிருஷ்ணமேனன் தலையைத்தொங்கப்போட்டு தூங்குகிறார். நேரு உடனே குஷ்வந்த் சிங்கிடம் கோபமாய் சொல்கிறார். “ என்னய்யா இது உங்க ஹை கமிஷனருக்கு உடம்பு சரியில்ல போலருக்கு. You must not expose him to outsiders like this ” ஆனால் கொஞ்ச நேரத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேருவும் தலையை நெஞ்சில தொங்கப்போட்டு நித்திரையில் ஆழ்கிறார்.

Pandit Nehru had a couple of days free to indulge in his favourite hobbies, buying books and seeing Lady Mountbatten.

நேரு ஒரு க்ரீக் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும்படி லேடி மவுண்ட்பேட்டனை அழைக்கிறார். ரெஸ்டாரண்ட் ஓனர் உடனே பத்திரிக்கைகளுக்கு தொலைபேசி தகவல் கொடுக்கிறார். ரெஸ்டாரெண்ட்டுக்கு பப்ளிசிட்டியாம்! அடுத்த நாள் காலை பேப்பர்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன.
பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கிடம் நேரு எரிச்சலுடன் சொல்கிறார்.” You have strange notions of publicity!”!

இவ்வாறாக பாண்டியன் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்!


                                                                                    எட்வினாவின் மகள் பமீலாவுக்கு "தம்" பற்றவைக்கும் நெஹ்ரு!                                                        
                                       
ஆக, டிக்கி ஒன்றும் புதிதாக செய்துவிடவில்லை.தனது அரசியல் "குரு"நாதரின் அடியொற்றியே அவரும் செயல்படுகிறார்.அதேசமயம் அவர் குருவை மிஞ்சிவிடவுமில்லை.இதை புரிந்துகொள்ள இது சாதாரண மனித காதலல்ல!


"தெய்வீக கள்ள காதல்!!!"

Saturday, 12 April 2014

இப்படியும் வசைபாடலாம் மோதியை!!!

நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் வந்தது இங்கே அவனவன் செய்யும் அலம்பல்கள் தாங்கவில்லை.தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகிக்கமுடியாத அவதூறுகளையும்,தனிமனித தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகிறது ஒரு பெரிய கும்பல்.இந்த கும்பலில் ஒலக பாட்டாளி வர்க்கத்தின் ஒரே(!) தலைவன் கார்ல் மார்க்ஸின்  பக்த கேடிகளிலிருந்து, தமிழின தலைக்கொள்ளி ஈ.வே.ராமசாமியின் சிஷ்ய கேடிகள் வரை அடக்கம்.போதாக்குறைக்கு பபூன் பொலிட்டீஸியன் நடிகர் கார்த்திக்-கிலிருந்து,ஜிப்பா ஜோல்னா பைய்யன் ஞானி வரை வேலைவெட்டியில்லாத அத்தனை பயல்களும் மோதி என்ற ஒரே நபரை குறிவைத்து வாய்க்கு வந்தபடி கண்டபடி உளறி கொட்டுகிறார்கள்.இவன்களை போன்ற சில்லறை பிரபலங்களே இந்த போடு போடும்போது உலக பிரபலங்களான (ஊழலில்தான்!) காங்கிரஸ்காரர்கள் மோதியை விட்டுவைப்பார்களா என்ன...? நரேந்திர மோதியின் சிறு வயது திருமண விஷயத்தை கையில் எடுத்து ஏதோ உலகத்தில் எங்கும் நடக்காத அக்கிரமம் நடந்து விட்டதாக வானத்துக்கும் பூமிக்கும் குதி குதியென்று குதிக்கிறார்கள்.மோதிக்கு எதிராக இந்த அயோக்கிய சிகாமணிகள் செய்யும் அத்தனை அவதூறுகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில் புதிய புதிய அவதூறுகள் இந்த கும்பல்களுக்கு தேவைப்படலாம்.ஆகையால் அடியேனால் முடிந்த சில அவதூறுகளை இந்த "மத சார்பற்ற"கும்பல்களுக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்.இதற்கு ராயல்டி எதுவும் தேவையில்லை.ஹிஹி!!!



நரேந்திர மோதி ஒரு மோசடி பேர்வழி.தனக்கு அப்பாவும்,அம்மாவும் இருப்பதை நீண்ட காலமாக மூடி மறைத்துள்ளார்.இது போதாதென்று தாத்தா,பாட்டி போன்ற உறவினர்களும் அவருக்கு உண்டு.இந்த தகவல்களை  இவ்வளவு காலமும் வெளியிடாமல் மறைத்த மோதியின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.
...................................................................................................................................................................

நரேந்திர மோதி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது,இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் ஜடையை இழுத்தும்,கன்னங்களை கிள்ளியும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இவரால் பாதிக்கப்பட்ட மாணவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாள்.இந்த அக்கிரமத்தை செய்த நரேந்திர மோதியா பெண்களை பாதுகாப்பார்? ஆகவே ,பெண்மணிகளே கண்மணிகளே ....மோதிக்கு ஓட்டு போடாதீர்!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி தனது சகோதரரின் டீக்கடையில் பணியாற்றியபோது டீ குடிக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுக்களையும்,ஓட்டை காசுகளையும் கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்.இவரால் ஏமாற்றப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் அடுத்தவேளை சோறுகூட இல்லாமல் வறுமை நிலையில் பங்களாக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.எனவே,ஏழை பாழைகளே...மோதிக்கு வாக்களிக்காதீர்!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி தனக்கு தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் வாங்கி குடிப்பது அதிர்ச்சியளிக்கிறது.குடிநீரை இப்படி விரயம் செய்யும் இவரால் தண்ணீர் பிரச்சனையை எப்படி தீர்க்கமுடியும்? ஆதலால்,குடிமக்களே...உங்கள் வாக்கு எங்களுக்கே!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் தூங்குகிறார்.இப்படிப்பட்ட சோம்பேறியை,தூங்குமூஞ்சி பேர்வழியை உலகம் கண்டதில்லை.இந்த கும்பகர்ண ஆசாமிக்கா உங்கள் ஓட்டு...?

...................................................................................................................................................................

நரேந்திர மோதி காலை உணவாக மட்டும் 5 சப்பாத்திகள் சாப்பிடுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமாகியுள்ளது.மதியம் 3 சப்பாத்திகளும்,இரவு 4 சப்பாத்திகளும் சாப்பிடுகிறார்.ஆகமொத்தம் ஒரு நாளைக்கு 12 சப்பாத்திகளை இந்த மனிதர் தின்று தீர்க்கிறார்.இந்த சாப்பாட்டு ராமனுக்கா நீங்கள் வாக்களிக்க போகிறீர்கள்...?

...................................................................................................................................................................

நரேந்திர மோதியின் கொடுங்கோல் ஆட்சியில் மத கலவரங்களை தூண்டும்  அப்பாவி தீவிரவாதிகளையும்,குண்டு வைப்பதை தவிர வேறு ஒரு பாவமும் அறியா பயங்கரவாதிகளையும் என்கவ்ண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்வது அப்பட்டமான மனித உரிமை மீறல்.ஆதலால்,இஸ்லாமிய பெருங்குடி மக்களே....உங்கள் வாக்கு கை சின்னத்திற்கே!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி கல்லூரியில் படித்த காலத்தில் மற்ற மாணவர்கள் கிளாஸ் கட் அடித்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தபோது இவர்மட்டும் ஒழுக்கம் சிறிதுமில்லாமல் வகுப்பில் தனியாக அமர்ந்து படித்திருக்கிறார்.சக மாணவிகளை மாணவர்கள் ஈவ் டீசிங் செய்தபோது ஆணாதிக்க வெறியுடன் அதை கண்டித்திருக்கிறார்.ஆகவே,மாணவ கண்மணிகளே மாணவ விரோதியான மோதிக்கு தக்க பாடம் புகட்டுவீர்!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட் ஆடுகிறேன் பேர்வழி என்று ஏராளமான கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெறியாட்டம் போட்டிருக்கிறார்.முஸ்லிம்களின் மண்டையை குறிவைத்து பந்தை அடித்து படுகாயப் படுத்தியிருக்கிறார்.இவரால் மண்டை உடைந்த முஸ்லிம்கள் தொழுகை செய்யக்கூட முடியாமல் இன்றும் அவதிப்படுகிறார்கள்.சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை கெடுத்த மதவெறியர் மோதிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது!

...................................................................................................................................................................

நரேந்திர மோதி என்ற பெயரில் உலா வருபவர் உண்மையில் நரேந்திர மோதியே அல்ல.உண்மையான நரேந்திர மோதி குஜராத் பூகம்பத்தில் சிக்கி இறந்துவிட்டார்.இறந்துப்போன மோதியின் முகசாயலில் ஒரு போலியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள்.எனவே இந்த போலி மோதியை கண்டு ஏமாறாமல் அன்னை சோனியாவின் அருந்தவப்புதல்வர் ராகுல் காந்திக்கே வாக்களிப்பீர்!


...................................................................................................................................................................